இந்தியாவின் முதல் பிட்காயின் ATM பெங்களூரில் திறப்பு!

பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் யூனோகாயின் நிறுவனத்தின் பிட்காயின் ATM திறக்கப்பட்டுள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2018, 06:02 PM IST
இந்தியாவின் முதல் பிட்காயின் ATM பெங்களூரில் திறப்பு!  title=

பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் யூனோகாயின் நிறுவனத்தின் பிட்காயின் ATM திறக்கப்பட்டுள்ளது..! 

இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கிரிப்ட்டோ கரண்சி ATM துவங்கப்பட்டுள்ளது. 

விர்ச்சுவல் கரண்சி எனப்படும Bitcoin புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையின் மூலம் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிப்பது கடினம். மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால் 10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது முதன்முதலாக கிரிப்டோ கரண்சிகளுக்காக தனியாக ATM துவங்கப்பட்டுள்ளது. இந்த ATM-ல் டெபிட்/கிரடிட் கார்டு ஸ்லாட் செயல்படாது. யூனோகாயின்,  யூனோடாக்ஸ் (Unodax) வாடிக்கையாளர்கள், 500 ரூபாய் நோட்டுகளாக ரொக்கமாக நாள் ஒன்றுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் போடலாம் அல்லது எடுக்கலாம். கணக்கில் உள்ள தொகை மூலம்  கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம். தங்களிடம் 13 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அவர்களது வசதிக்காக ATM திறக்கப்பட்டுள்ளதாக 
யூனோகாயின் நிறுவனர் சாத்விக் விஸ்வநாத் தெரிவித்துள்ளார். 

டெல்லி, மும்பையிலும் திறக்கப்படும் என்றும், இது வழக்கமான ATM எந்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் சட்டபூர்வமாக செல்லுபடியாகக் கூடியவை அல்ல என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தாலும், அவை சட்டவிரோதமானவை என்று கூறவில்லை என சாத்விக் விஸ்வநாத் குறிப்பிட்டுள்ளார். முதலீடு செய்பவரே அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு பொறுப்பு என்பதோடு, பிட்காயின் தொழில் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்ல என்பதே அதன் பொருள் என்றும் சாத்விக் விஸ்வநாத் கூறியுள்ளார்.

 

Trending News