GSAT-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV-Mk 3 ராக்கெட்....

ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2018, 05:35 PM IST
GSAT-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV-Mk 3 ராக்கெட்.... title=

ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில் நுட்பத்தில் தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு, சென்னை அருகே உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 

கடல்சார் ஆராய்ச்சி, தொலைத்தூர தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக GSAT-29 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. மூவாயிரத்து 425 கிலோ எடை கொண்ட GSAT-29 செயற்கைக்கோளில் அதிநவீன சக்தி கொண்ட டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 3.5 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு அனுப்ப முடியும். பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் GSAT-29 செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் GSLV-Mk 3 -D2 என்பது தனிச்சிறப்பு. தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-ஆவது செயற்கைகோள் GSAT-29 ஆகும். கஜா புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் ராக்கெட் ஏவப்படாது என்று வதந்திகள் பரவிவந்த நிலையில், திட்டமிட்டபடி விண்ணில் GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மேலும், திட்டமிட்ட பாதையில் சரியாக GSLV-Mk 3 ராக்கெட் போய்க்கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News