குட்கா ஊழல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி!!

குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது!  

Last Updated : Apr 26, 2018, 11:33 AM IST
குட்கா ஊழல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி!!  title=

11:29 26-04-2018
குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகவே தடையை மீறி குட்கா உற்பத்தி செய்யப்பட்டு வருவதும், விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

ஆனால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறி வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Trending News