குஜராத்தில் பாகிஸ்தான் ஹீரோக்கள் என்ற பேனர்களில் பயங்கரவாதிகள் பர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் இறந்ததுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 34-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இதுவரைக்கும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை
56-ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கடந்த மாதம் 9-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து அங்கு வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் முற்றிலுமாக சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் இதனால் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.
காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளான்.
பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டு உள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.