Corona-வுடனான போரில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு நன்றி: WHO தலைவர் பாராட்டு!!

தொற்றுநோயை சமாளிக்க உலகளாவிய கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் WHO அமைப்பின் முக்கிய பங்கை பிரதமர் பாராட்டினார்.

Last Updated : Nov 12, 2020, 08:35 AM IST
  • பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பின் தலைவரிடம் பேசினார்.
  • பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அர்த்தமுள்ள உரையாடலுக்கு நன்றி-WHO தலைவேர்.
  • கொரோனாவுடனான போரில் இந்தியப் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்- WHO தலைவேர்.
Corona-வுடனான போரில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு நன்றி: WHO தலைவர் பாராட்டு!! title=

புதுடெல்லி: கொரோனாவை (Corona Virus) எதிர்த்துப் போராடுவதில் இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை உலகம் பார்த்து வியக்கிறது. உலக அளவில் இந்தியா பல முறை பாராட்டப்பட்டது. இப்போது மீண்டும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியா மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்களை பாராட்டியுள்ளது.

தொலைபேசியில் கலந்துரையாடல்

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு WHO தலைவர் ட்வீட் மூலம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  கொரோனாவுடனான போரில் இந்தியப் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயை சமாளிப்பதற்கான தற்போதைய கூட்டாண்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுக்கும் (Tedros Adhanom Ghebreyesus) இடையே புதன்கிழமை தொலைபேசியில் உரையாடல் நடைபெற்றது.

இந்த நேரத்தில், நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவத்தையும் சேர்ப்பது குறித்து பேச்சு நடந்தது.

ஆயுஷ்மான் பாரத்துக்கு பாராட்டு

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பின் தலைவரிடம் பேசினார். தொற்றுநோயை சமாளிக்க உலகளாவிய கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கை பிரதமர் பாராட்டினார். மற்ற நோய்களுக்கு எதிரான போராட்டம் சமமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த உரையாடலின் போது, ​​ஆயுஷ்மான் பாரத் மற்றும் காசநோய்க்கு எதிரான பிரச்சாரம் போன்ற இந்தியாவின் உள்நாட்டு முயற்சிகளை WHO தலைவர் பாராட்டினார்.

உலக சுகாதாரத்திலும் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் கூறினார்.

அர்த்தமுள்ள உரையாடலுக்கு நன்றி

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கெப்ரெஸ் ட்வீட் செய்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவரை பாராட்டினார். அவர் தனது ட்வீட்டில், 'நமஸ்தே, பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தில் அறிவு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அணுகலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் அதில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் நீங்கள் மேற்கொண்ட மிகவும் அர்த்தமுள்ள உரையாடலுக்கு நன்றி' என்று எழுதினார். தனது இரண்டாவது ட்வீட்டில், கொரோனா தடுப்பு மருந்து (Corona Vaccine) மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.

ALSO READ: நாட்டின் முதல் கோவிட் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை அறிமுகம்... இதன் சிறப்பு என்ன?

Trending News