பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
Kanyakumari, Lemuria Beach : கன்னியாகுமரி லெமூரியா கடற்கரையில் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கையையும் மீறி அங்கு குளிக்கச் சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் பயிற்சி மருத்துவ மாணவ, மாணவிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
பாஜக வேட்பாளரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டி கேட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடியதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள், தங்களது ஊருக்குள் எந்த அரசியல் கட்சியினரும் வாக்கு கேட்டு வர வேண்டாம் என பேனர் வைத்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜகவில் பாசிசம் உள்ளது தெரியவில்லையா? என்று குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார் .
Prime Minister Modi: கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என கடுமையாக விமர்சித்தார். திமுக 2ஜி ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.