திமுக எம்.பி.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, நடந்த பிரச்னை தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் அளித்தனர்.
பிறகு திருச்சி சிவா கூறியதாவது:-
மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இன்று ஆளுநரை சந்திக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலையற்ற அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று அதற்கான தீர்வு உருவானது. சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதையடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கூறப்பட்ட நிலையில், நேற்று சட்டமன்றம் கூடியது.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் இது சரித்திரம் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
தர்மம் வெல்வதற்கு காலம் உள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினர். எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள், எம்எல்ஏக்கள் அவர்களை சந்தித்து விட்டு வாக்களிக்கட்டும் என்று கோரினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை. திமுக சட்டசபை உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.
திமுக சட்டசபையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 9 திமுக எம்.எல்.ஏ.,க்கள் உடன் சென்றுள்ளனர்.
கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பில் ஆதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறது. கூவத்தூரில் இருந்து ஆதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்கள் கார்களில் பலத்த பாதுகாப்புடன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் சுமார் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்து வைத்துக் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ், கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர்.
அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்
நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பானது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது, சாதகமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன. ஆனால் சுதாகரன் சரணடையவில்லை.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சரணடைந்த சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.