அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பெரிய பேனர் வைக்கப்பட்டு அதில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
சசிகலா எச்சரிக்கையால் ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் சசிகலா இன்று கூவத்தூரில்தங்க வைக்ககப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் கவர்னர் மாளிகை முன்பு எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி அமைப்பதை குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் தொடர்ந்து நிதானமான போக்கை கடைபிடித்து வருகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை. மேலும் அவர் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவரும் அவரை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் சசிகலா தரப்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அப்பொழுது நாமக்கல் எம்.பி., பி.ஆர்., சுந்தரம் பேசியதாவது:-
உயர் ரத்த அழுத்தம், கை நடுக்கம், உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் (எம்.நடராஜன்) நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மேலும் 2 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 4 எம்.பிக்களின் ஆதரவு ஓ. பன்னீர்செல்வத்துக்கு உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். இதேபோல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.
சசிகலாவின் அவசரத்தால்தான் எம்ஜிஆரின் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது, இதே நிலை நீடித்தால் அதிரடி முடிவு எடுக்க தயங்கமாட்டேன் என நடிகை லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
எஎன்ஐ இடம் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
ஆட்சியமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு சுப்ரமணியம் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும், தமிழக பொறுப்பு ஆளுநரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.