Aliens: வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்     

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 05:44 PM IST
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதா?
  • முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் சொல்வது உண்மையா?
  • செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளிவீரர்கள் இருக்கிறார்களா?
Aliens: வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல் title=

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதா? முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் சொல்வது உண்மையா? செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளிவீரர்கள் இருக்கிறார்களா? என பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது இஸ்ரேலின் முன்னாள் இஸ்ரேலிய ஜெனரலும் தற்போது பேராசிரியருமாக பணியாற்றுபவருமான ஹைம் எஷெட் (Haim Eshed) ஒரு நேர்காணலில் வெளியிட்டுள்ள கருத்துகள்.

வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மை என்றும், அவர்கள் அரசாங்கங்களுடன் ரகசியமாக வேலை செய்கிறார்கள், அவர்களின் நேரத்தை ஒதுக்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஹைம் எஷெட் ஒரு இஸ்ரேலிய பத்திரிகையின் பேட்டியின்போது கூறினார். "மனிதர்கள் (human) தயாராக இல்லை" என்பதால் அவர்கள் ரகசியமாக இருக்கிறார்கள் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹைம் எஷெட் (Haim Eshed), “டிரம்ப் [aliens existence], வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் கேலடிக் கூட்டமைப்பில் உள்ள வேற்றுகிரகவாசிகள் (Aliens), 'காத்திருங்கள், மக்கள் முதலில் அமைதியாக இருக்கட்டும்' என்று கூறுகிறார்கள் ” என்று கூறுகிறார்.

Also Read | England: நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை

“அவர்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. முதலில் அவர்களை மக்கள் விவேகமாக புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

வேற்றுகிரகவாசிகளின் இருப்பை உறுதிப்படுத்த முடியும், ஏனென்றால் அவர்கள் நீண்ட காலமாக நம்மிடையே இருந்ததாக ஹைம் எஷெட் கூறுகிறார். அவர்களுக்கு  "கேலடிக் கூட்டமைப்பு" ("Galactic Federation") என்ற சொந்த கூட்டமைப்பு இருப்பதாக ஹைம் எஷெட் கூறுவதாக இஸ்ரேலிய பத்திரிகையான Yediot Aharonot தெரிவிக்கிறது. 

வேற்றுகிரகவாசிகள் (Aliens) தங்கள் நகர்வுகளை மூடிமறைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்று கூறும் எஷெட், வேற்று கிரகவாதிகள் சமாதானமாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார். "மனிதகுலம் மேம்பட்டு, விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை அவற்றை இயல்பாக புரிந்துகொள்ளும் கட்டத்தை அடைவதற்காக ஏலியன்கள் காத்திருக்கிறார்கள்" என்று எஷெட் கூறினார்.

“அமெரிக்க அரசாங்கத்திற்கும் வெளிகிரகவாசிகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. இங்கே சோதனைகள் செய்ய அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்களும், பிரபஞ்சம் முழுவதையும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர், மேலும் அவர்கள் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார்கள். செவ்வாய் கிரகத்தின் (Mars) ஆழத்தில் ஒரு நிலத்தடி தளம் உள்ளது, அவற்றுக்கென பிரதிநிதிகள் இருக்கிறார்கள், அமெரிக்க விண்வெளி வீரர்களும் அங்கு இருக்கின்றனர்” என்று பரபரப்பான தகவலை முன்னாள் இஸ்ரேலிய ஜெனரலும் தற்போது பேராசிரியருமாக பணியாற்றுபவருமான ஹைம் எஷெட் (Haim Eshed) தெரிவித்துள்ளார்.

Also Read | COVID Vaccine-ன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் 90 வயதான Margaret Keenan

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News