இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்..!

இந்தியா -பாகிஸ்தான் இடையே என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய தயார் என்ற அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 26, 2019, 07:46 AM IST
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்..! title=

இந்தியா -பாகிஸ்தான் இடையே என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய தயார் என்ற அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில்; இரு நாடுகளும் "இப்போதே மிகவும் கடுமையான முரண்பாடுகளில் உள்ளன, மேலும், அது சிறப்பாக வரும் என்று நம்புகிறேன்" என்பதால், அவர் தனது உதவியை நீட்டித்துள்ளார், நடுவர் அல்லது மத்தியஸ்தம் என தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகியோரை தனது நல்ல நண்பர்கள் என்று அழைத்த டிரம்ப், "இரண்டு அணுசக்தி நாடுகள் என்பதால், அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது" என்று கூறினார். பாகிஸ்தான், இந்தியாவின் தலைவர்களுடனும் நாங்கள் மிகவும் பயனுள்ள உரையாடல்களை நடத்தினோம் ... மேலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை, நாங்கள் காஷ்மீர் பற்றி பேசினோம். நான் எந்த உதவியாக இருந்தாலும், நான் சொன்னேன் - நான் வழங்கினேன், அது நடுவர் அல்லது மத்தியஸ்தம், என அது எதுவாக இருந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் இப்போது மிகவும் முரண்படுகிறார்கள், மேலும் அது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன், ”என்று டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், நியுயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேச்சு நடத்திய போது அதிபர் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்தியா ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதாக ரவீஷ்குமார் தெரிவித்தார். இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் பிரதமர் மோடி இதனை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பற்றி அதிபர் டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்துவது தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்து மட்டும்தான் என்றும் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

 

Trending News