பாகிஸ்தான் கராச்சியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பங்குச் சந்தை (Pakistan Stock Exchange) கட்டிடம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில், 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2020, 12:36 PM IST
  • பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீது பயங்கரவாத தாக்குதல்.
  • பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில், 5 பேர் கொல்லப்பட்டனர்
  • தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகளையும் போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கராச்சியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலி title=

புதுடெல்லி: பாகிஸ்தானின் (Pakistan) கராச்சி பங்குச் சந்தை (Pakistan Stock Exchange) கட்டிடம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில், 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தகவல்களின்படி, தாக்குதல் நடத்திய நான்கு பேர் கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்திய அனைவரையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றனர். கராச்சியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நான்கு பயங்கரவாதிகளும் பங்குச் சந்தையில் நுழைய முயன்றனர். முதலில் பயங்கரவாதிகள் நுழைவு வாயிலை கையெறி குண்டு மூலம் தாக்கினர். அதன் பிறகு உள்ளே நுழைய முயன்றனர். இதன் பின்னர், நான்கு பயங்கரவாதிகளையும் போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டனர். பயங்கரவாதிகள் அனைவரும் போலீஸ் சீருடையில் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

READ | தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு தியாகி பட்டம் சூட்டிய பாகிஸ்தான் பிரதமர்

READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை

அதே நேரத்தில், இன்று இந்திய பாதுகாப்பு வீரர்களும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் மீண்டும் பயங்கரவாதம் இல்லாதா மாவட்டமாக மாறியுள்ளது. தோந்தாவில் வசிக்கும் ஹிஸ்புல் தளபதி மசூத், அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நடந்த மோதலில் கொல்லப்பட்டார். தோடா மாவட்டத்தில் உயிருடன் இருந்த கடைசி பயங்கரவாதி இவர்தான். இவரை கொன்றதன் மூலம், தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் முடிவுக்கு வந்துள்ளது. மசூத்திலிருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஹிஸ்புல் கமாண்டர் மசூத் மற்றும் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் அடங்குவர். இவர்கள் மசூத் தோடாவில் வசிப்பவர். இந்த ஆண்டு ஜனவரி முதல், இந்த ஆண்டு ஜனவரி முதல் 116 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Trending News