ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் மாயமாகியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

Last Updated : Jun 26, 2020, 01:09 PM IST
  • ஜனவரி 2017 முதல் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 399 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது, இதில் 218 பேர் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என அறியப்படுவில்லை.
  • உளவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத பயிற்சிக்காக குறிவைத்து வருவதாகவும், 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் நடந்த தாக்குதல்களைப் போன்று அவர்களைச் சித்தப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை... title=

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் மாயமாகியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

மேலும் ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையை உருவாக்க பாகிஸ்தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. ஜனவரி 2017 முதல் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 399 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது, இதில் 218 பேர் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என அறியப்படுவில்லை.

READ | சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?

இதுகுறித்து உளவுதுறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்., "பிப்ரவரி 14, 2019 இன் புல்வாமா தாக்குதலின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாக்கிஸ்தான் இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் பாக்கிஸ்தான் யூனியன் பிரதேசத்திலிருந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஜூன் 23 அன்று, புது டெல்லியில் தனது உயர் ஸ்தானிகராலயத்தின் பலத்தை பாதியாக குறைக்கும் படி இந்தியா கேட்டுக்கொண்டது. மற்றும் எல்லை தாண்டிய வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பெரிய கொள்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகளின் நடவடிக்கை இருப்பதாகவும் குற்றம்சாட்டியது.

இந்தியாவின் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என மறுத்த பாகிஸ்தான், பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பலத்தை ஏழு நாட்களுக்குள் குறைப்பதாகவும் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது உளவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத பயிற்சிக்காக குறிவைத்து வருவதாகவும், 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் நடந்த தாக்குதல்களைப் போன்று அவர்களைச் சித்தப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT)-ன் பல ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி பாகிஸ்தானின் துத்னியலில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கெரான் துறைக்குள் ஊடுருவிய பின்னர் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

READ | தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு தியாகி பட்டம் சூட்டிய பாகிஸ்தான் பிரதமர்...

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளில் 3 பேர் அடில் உசேன் மிர், உமர் நசீர் கான் மற்றும் சஜ்ஜாத் அகமது ஹர்ரே, ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்கள். அனைவரும் 2018 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த புதுடெல்லியில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வழங்கிய விசாக்களில் அடையாளம் காணப்பட்டதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிற நிகழ்வுகளை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டு விசாக்களுடன் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் மாயமாகியிருப்பது மற்றொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை அதிகரித்துள்ளது.

Trending News