இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால்... எச்சரிக்கும் முஷரப்!

இந்தியா மீது பாக்கிஸ்தான் ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என முஷரப் எச்சரித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2019, 08:24 PM IST
இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால்... எச்சரிக்கும் முஷரப்! title=

இந்தியா மீது பாக்கிஸ்தான் ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என முஷரப் எச்சரித்துள்ளார்!

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடுவார்கள் எனவும் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் மோடி எச்சரித்திருந்தார். 

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, துபாய் நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் புல்வாமா தாக்குதல் குறித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பூசல் அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

பேட்டியின் போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்குமா? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற செய்தியாளர்களுக்கு பதிலளித்த முஷரப், ‘இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக 20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையும் இந்தியா அழித்துவிடும்.’ என எச்சரித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டிலிஇருந்து 2008-ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் அதிபராக பதவிவகித்த பர்வேஸ் முஷரப், அதற்கு முன்னர் 1999-ஆம் ஆண்டில் இந்தியா நடத்திய கார்கில் போர் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்து போரை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News