ADF Rebel Group: உலகையே உலுக்கும் ISIS தீவிரவாதிகளின் வெறித்தனம்! 41 பேர் பலி

Uganda School Attack: நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாய் மாணவர்களைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறித்தனம்! மாணவர்களின் கழுத்தை வெட்டி பள்ளிக்கு தீ வைத்த கோரம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2023, 09:40 PM IST
  • மாணவர்களின் கழுத்தை வெட்டிய பயங்கரவாதிகள்
  • பள்ளிக்கு தீ வைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
  • உகாண்டாவின் கருப்பு நாள்
ADF Rebel Group: உலகையே உலுக்கும் ISIS தீவிரவாதிகளின் வெறித்தனம்! 41 பேர் பலி title=

உகாண்டாவில் உள்ள பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அடையாளம் கூட தெரியாத அளவுக்கு இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளது உலகையே உறைய வைத்துள்ளது. தாக்குதலைத் தொடங்கியதும், முதலில் கழுத்தை அறுத்த தீவிரவாதிகள், பிறகு பள்ளிக்கு தீ வைத்தனர்.

பள்ளி மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களைத் தவிர காயமடைந்தவர்களில் 8 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் காங்கோ எல்லைக்கு அருகே நடந்ததாக உகாண்டா போலீசார் தெரிவித்தனர்.

நேற்று (2023 ஜூன் 16 வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் Mpondwe இல் உள்ள Lubiriha மேல்நிலைப் பள்ளியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளியில் இருந்த தங்கும் விடுதிக்கு தீ வைக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் சூறையாடப்பட்டது.

13 மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் இந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, பள்ளியில் 62 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் 39 மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | விஜய் கொடுத்த சிக்னல்... உதயநிதி சொன்ன பதில் - அரசியல் விளையாட்டு ஆரம்பமா?

இதுவரை யாரும் உயிருடன் சிக்கவில்லை என்பதால், இன்னும் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என இராணுவம் அஞ்சுகிறது,  

காங்கோ ஜனநாயகக் குடியரசை (DRC) தளமாகக் கொண்ட உகாண்டா குழுவான நேச நாட்டு ஜனநாயகப் படைகள் (Allied Democratic Forces) இந்தத் தாக்குதலை நடத்தியதாக போலீஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள், காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர்களை  கண்டுபிடிக்க, உகாண்டாவின் மக்கள் பாதுகாப்புப் படையும் (People's Defense Force) காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரெட் எனகா தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க ராணுவ விமானங்களும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களில் பல பவேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
நேச நாட்டு ஜனநாயகப் படைகளின் கிளர்ச்சியாளர்கள் கடந்த இரு தசாப்தங்களாக காங்கோ எல்லையில் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.சில மாணவர்கள் எரிக்கப்பட்டனர் அல்லது வெட்டிக் கொல்லப்பட்டனர் என உகாண்டா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் டிக் ஓலம் ஊடகங்களிடம் தெரிவித்தார். சில சிறுமிகளும் கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | விஜய் கொடுத்த சிக்னல்... உதயநிதி சொன்ன பதில் - அரசியல் விளையாட்டு ஆரம்பமா?

சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவு எரிந்துள்ளதாகவும், அவற்றை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய ADF போராளிகள் உகாண்டா எல்லைக்கு அருகிலுள்ள காங்கோ கிராமத்தை தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் வந்துள்ளது. DRC உடன் உகாண்டாவின் எல்லையில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள பள்ளியின் மீது 25 ஆண்டுகளில் இது முதல் தாக்குதல் ஆகும்.

ஜூன் 1998 இல், காங்கோ எல்லைக்கு அருகிலுள்ள கிச்வாம்பா தொழில்நுட்பக் கழகத்தின் மீது ADF நடத்திய தாக்குதலில் விடுதியில் இருந்த 80 மாணவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News