காபூலில் பேரணியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி

Last Updated : Jul 23, 2016, 05:58 PM IST
காபூலில் பேரணியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி  title=

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பேரணியில் தற்கொலை படையை சேர்ந்த 3 பேரின் குண்டு வெடித்ததில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூலில் தெக் மசங்கில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி மாபெரும் பேரணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலை படையை சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

Trending News