குவெட்டா: போலீஸ் பயிற்சி முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!!

பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவினுள்ள போலீஸ் பயிற்சி முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் சுமார் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்தனர். மேலும் 6௦-க்கு மேற்பட்ட பயிற்சி போலீசார் பலியாயினர்.

Last Updated : Oct 25, 2016, 08:49 AM IST
குவெட்டா: போலீஸ் பயிற்சி முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!! title=

குவெட்டா: பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவினுள்ள போலீஸ் பயிற்சி முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் சுமார் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்தனர். மேலும் 6௦-க்கு மேற்பட்ட பயிற்சி போலீசார் பலியாயினர். 118-க்கு மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். 

குவெட்டாவில் சுமார் 700 போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு அந்த மையத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 பயிற்சி போலீசார் காயம் அடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசார் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அதிரடி படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

நள்ளிரவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதாக பலோசிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். காவலர் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News