7th Pay Commission: ஊழியர்களுக்கு 3 பம்பர் பரிசுகள், கணக்கில் வரும் கூடுதல் தொகை

7th Pay Commission: ஆகஸ்ட்-செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று பரிசுகள் கிடைக்கப் போகின்றன. இவற்றை பற்றிய அறிவிப்பு வந்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2022, 01:52 PM IST
  • மீண்டும் அகவிலைப்படி அதிகரிக்கும்.
  • டிஏ நிலுவைத் தொகை குறித்தும் முடிவு.
  • பிஎஃப் வட்டி பணம் கிடைக்கும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு 3 பம்பர் பரிசுகள், கணக்கில் வரும் கூடுதல் தொகை title=

7வது ஊதியக் கமிஷன் சமீபத்திய புதுப்பிப்பு: செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று பரிசுகள் கிடைக்கப் போகின்றன. இவற்றை பற்றிய அறிவிப்பு வந்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும். முதல் மகிழ்ச்சியான செய்தி ஊழியர்களின் அகவிலைப்படி பற்றியது. செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படலாம். மூன்றாவது பரிசு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பானது. இதன் கீழ் பிஎஃப் கணக்கில் வட்டி பணம் செப்டம்பர் இறுதிக்குள் வரவு வைக்கப்படக்கூடும். 

மீண்டும் அகவிலைப்படி அதிகரிக்கும்!

ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீடு 129.2 புள்ளிகளாக வந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 38 சதவீதமாக உயரும். பிப்ரவரி முதல் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்துள்ளது. ஜூன் மாத புள்ளிவிவரங்களின்படி, இது 129 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி குறித்த அறிவிப்பை அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடலாம். ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்துடன் டிஏ பாக்கியும் வரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 52 லட்சம் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய அப்டேட்

டிஏ நிலுவைத் தொகை குறித்தும் முடிவு

நிலுவையில் உள்ள 18 மாத நிலுவைத் தொகை விவகாரம் பிரதமர் மோடியை எட்டியுள்ளது. இது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி விரைவில் கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 மே மாதம் 30 ஜூன் 2021 வரை அகவிலைப்படி உயர்வை நிதி அமைச்சகம் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிஎஃப் வட்டி பணம் கிடைக்கும்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு, வட்டி பணம் பற்றிய நல்ல செய்தியும் வரக்கூடும். செப்டம்பரில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வட்டி பணப் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்பட்ட தகவல்களின்படி, பிஎஃப் மீதான வட்டி கணக்கிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை 8.1 சதவீதம் என்ற வீதத்தில் பிஎஃப் வட்டி கணக்கில் வரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி, 18 மாத டிஏ! முழு விவரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News