7th Pay Commission: 18 மாத அரியர் தொகை கிடைக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட் இதோ

7th Pay Commission: கொரோனா நோய்த்தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றிய தெளிவான அறிவிப்பு மிக விரைவில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2022, 03:34 PM IST
  • 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்.
  • ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றும் நிறைவேற்றப்படக் கூடும்.
  • 18 மாத கால அகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றிய தெளிவான அறிவிப்பு.
7th Pay Commission: 18 மாத அரியர் தொகை கிடைக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட் இதோ title=

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.  ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றியும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றும் நிறைவேற்றப்படக் கூடும் என கூறப்படுகின்றது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றிய தெளிவான அறிவிப்பு மிக விரைவில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும். 

அகவிலைப்படி உயர்வு முடக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகைக்கான ஊழியர்களின் கோரிக்கைக்கு இந்த முறை பதில் கிடைக்கும் என்று ஊழியர்கள் தரப்பில் அதிக நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தின் சமீபத்திய வளர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து ஊழியர்கள் தரப்புக்கும் அமைச்சரவை செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படக்கூடும் என ஜீ நியூஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் இருந்து 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. எனினும், இது குறித்து இப்போது நல்ல செய்தி கிடைக்கும் என ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணம் காட்டி நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.49,420 அதிகரிக்க வாய்ப்பு! 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையாக எவ்வளவு கிடைக்கும்? 

வெவ்வேறு ஊழியர்களுக்கு வெவ்வேறு அளவிலான நிலுவைத்தொகை கிடைக்கும் என ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) தேசிய கவுன்சிலின் சிவ கோபால் மிஸ்ரா கூறியுள்ளார், லெவல்-1 இன் கீழ் உள்ள ஊழியர்களுக்கான டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. மறுபுறம், 7வது ஊதியக் குழுவின் கீழ் லெவல்-13 மற்றும் லெவல்-14 ஊதிய விகிதத்தில் அதிகபட்ச அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு இந்த தொகை முறையே ரூ.1,23,100-2,15,900 மற்றும் ரூ.1,44,200-ரூ.2,18,200 வரை இருக்கும்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு தற்காலிகமாக முடக்கப்பட்டது. நிலைமை சற்று சீரானவுடன் அகவிலைப்படி உயர்வு மீண்டும் 11 சதவீத உயர்வுடன் தொடங்கப்பட்டது.

கோவிட் காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அதிகரிப்புக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் இந்த பிரச்சினையை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. நிலுவைத் தொகை வழங்கப்படாது என நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு தெளிவுபடுத்தியது. எனினும்,  இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஊழியர்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, இது தொடர்பான தீர்மானம் இப்போது எடுக்கப்படக்கூடும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News