7th Pay Commission: ஊழியர்களின் டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட்

7th Pay Commission: மார்ச், ஏப்ரலில் ஏஐசிபிஐ குறியீட்டு எண் அதிகரித்த பிறகு, மத்திய ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்த பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 03:24 PM IST
  • 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்.
  • 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்குமா?
  • இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?
7th Pay Commission: ஊழியர்களின் டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட்  title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து அரசிடம் இருந்து பெரிய அறிவிப்பு வந்துள்ளது. மார்ச், ஏப்ரலில் ஏஐசிபிஐ குறியீட்டு எண் அதிகரித்த பிறகு, மத்திய ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்த பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

2020ஆம் ஆண்டு முதல் மத்திய ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல செய்திகளால் குழப்பம்

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. முடக்கப்பட்ட அகவிலைப்படியின் மூன்று தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், முடக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை பற்றிய குழப்பம் இன்னும் உள்ளது.

அகவிலைப்படி நிலுவைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது குறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து பரப்பப்படும் செய்திகளால், இன்னும் பல குழப்பங்கள் உள்ளன. 

மேலும் படிக்க | 7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டிஏ 5% அதிகரிக்கலாம் 

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது

பல சமயங்களில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, அந்த காலத்தின் டிஏ நிலுவைத் தொடர்பான கோரிக்கை இருந்து வருகிறது. கோவிட்-19 நோய்த்தொற்றின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி பணம் தவணை முறையில் வழங்கப்பட்டது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை.

3 தவணைகளுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என மத்திய அரசிடம் இருந்து வந்த தகவல்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலை நிவாரணப் பாக்கியை உடனடி நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.

அகவிலைப்படி பாக்கி தவணை கிடைக்காது

ஒரு மதிப்பீட்டின்படி, மத்திய ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் (ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு) மற்றும் அகவிலைப்படி (ஊழியர்களுக்கான) நிலுவைத் தொகை சுமார் 34,000 கோடிகளாக உள்ளது. ஓய்வூதிய விதிகளை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு கூட்டத்தில், டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று செலவினத் துறை (டிஓஐ) தெளிவுபடுத்தியது.

தற்போது 34% அகவிலைபப்டி கிடைக்கிறது

ஜூலை 2021 முதல், அகவிலைப்படி மீதான தடை நீக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மூன்று முறை அதிகரித்துள்ளது. ஜூலை 1, 2021 முதல் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு முன், 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அக்டோபர் 2021 இல், 3 சதவீதம் மேலும் அதிகரித்ததால், அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மார்ச் 2022 இல், அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | DA உயர்வுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News