7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டிஏ 5% அதிகரிக்கலாம்

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 05:34 PM IST
  • ஜூலை 1 முதல் அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.
  • அகவிலைப்படி 39% ஆனால், சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
  • 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டிஏ 5% அதிகரிக்கலாம் title=

7 ஆவது ஊதுயக்கமிஷன் புதுப்பிப்பு: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.

டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக அதிகரிக்கலாம்

மார்ச் 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை 3-க்கு பதிலாக 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், 27 ஆயிரத்திற்கு மேல் உயரலாம்.

மேலும் படிக்க | ஜூலை முதல் மத்திய ஊழியர்களின் DA உயரும், எவ்வளவு உயரும் 

ஏஐசிபிஐ இன்டெக்ஸ் எண் வந்தது

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்த ஏஐசிபிஐ குறியீடு , மார்ச் மாதத்தில் ஒரு புள்ளி அதிகரித்து 126 ஆனது . ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. இதில் 1.35 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இப்போது மே மற்றும் ஜூன் மாத தரவு 127ஐ தாண்டினால், அகவிலைபப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

அகவிலைப்படி 39% ஆனால், சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில், 39% டிஏ பெறும்போது அவர்களுக்கு ரூ.22,191 டிஏ கிடைக்கும். தற்போது 34 சதவீதம் வீதம் ரூ.19,346 பெறப்படுகிறது. 5% டிஏ உயர்வு மூலம் சம்பளம் ரூ.2,845 உயரும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.34,140 உயர்வு இருக்கும்.

50 லட்சம் ஊழியர்கள் பயனடைகின்றனர்

அரசு ஆண்டுக்கு இருமுறை டிஏவை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இப்போது அகவிலைப்படி 5 சதவீதம் உயர்ந்தால் 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளதா பழைய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News