7th Pay Commisison ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இந்த தேதியில் அறிவிப்பு.. எகிறப்போகும் டிஏ

7th Pay Commission: ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஆண்டின் இரண்டாம் பாதிக்கான, அதாவது ஜூலை 1 முதலான அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பை விரைவில் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2023, 09:09 PM IST
  • அக்டோபர் 15க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரக்கூடும்
  • கவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • அரியர் தொகையும் கிடைக்கும்.
7th Pay Commisison ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இந்த தேதியில் அறிவிப்பு.. எகிறப்போகும் டிஏ  title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்த ஒரு மிகச்சிறந்த அப்டேட் இப்போது வந்துள்ளது. ரக்ஷாபந்தன் பண்டிகைக்குப் பிறகு, எல்பிஜி காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று மத்திய மோடி அரசு அறிவித்தது. இந்த 100 ரூபாய் கூடுதல் மானியம் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு நேற்று வந்தது. கேஸ் சிலிண்டர் மானிய உயர்வுக்கு பிறகு இப்போது மத்திய அரசு, ஊழியர்களுக்கான நல்ல செய்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஆண்டின் இரண்டாம் பாதிக்கான, அதாவது ஜூலை 1 முதலான அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பை விரைவில் பெறுவார்கள்.

அக்டோபர் 15க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரக்கூடும்

நவராத்திரியின் போது ஊழியர்களின் அகவிலைபப்டி (Dearness Allowance) மற்றும் டிஆர் (Dearness Relief) குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை வெளியிடக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில வருடங்களாக நவராத்திரியின் போது மத்திய அமைச்சரவை DA மற்றும் DR பற்றிய நல்ல செய்திகளை வழங்கியது நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபுறம், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பையும் வெளியிட உள்ளது. இதற்கு முன் அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | 8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்... அரசாங்க அறிவிப்பு எப்போது?

DA Hike: அறிவிப்பு வெளியாவதற்குள் டிஏ உயர்வு இருக்கும்

5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டால், அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடுபதில் சிக்கல் ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், அகவிலைப்படியை அறிவிக்க அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை டிஏ தொடர்பான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஜனவரி 1 முதல் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடன் ஊதியம் வழங்கப்படுகிறது. டிஏ தொடர்பான இரண்டாவது அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கும். மேலும் ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பின் அரியர் தொகையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். 

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? (Dearness Allowance Increase)

மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் படி பார்த்தால் அகவிலைப்படி அதிகரிப்பு 4 சதவிகிதம் இருக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வருகிறார்கள். டிஏ 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும்.

அரியர் தொகையும் கிடைக்கும் (DA Arrears)

ஜூலை 1 2023 முதல் நடைமுறைக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட டிஏ அக்டோபர் மாத சம்பளத்துடன் வரும். இது மட்டுமின்றி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும். இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பம்பர் பண வரவு இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் - ஊதியத்தை உயர்த்தி அறிவித்தது தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News