8th Pay Commission: புதிய சூத்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் உயரும்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு உள்ளது. 8 ஆவது ஊதியக்குழு குறித்த முக்கிய அப்டேட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2022, 10:35 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
  • 8 ஆவது ஊதிய கமிஷன் குறித்தும் புதிய அப்டேட் வந்துள்ளது.
  • வரும் காலங்களில் புதிய பார்முலா மூலம் ஊழியர்களின் சம்பளம் உயரும் என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது
8th Pay Commission: புதிய சூத்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் உயரும் title=

8 ஆவது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 8 ஆவது ஊதிய கமிஷன் குறித்தும் புதிய அப்டேட் வந்துள்ளது. வரும் காலங்களில் புதிய பார்முலா மூலம் ஊழியர்களின் சம்பளம் உயரும் என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில், 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி புதிய தகவலை தெரிவித்துள்ளார். இதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய 8 ஆவது ஊதியக் குழுவை  அமைக்கும் யோசனை இப்போது இல்லை. ஆனால், புதிய பார்முலா மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும்.

நிதித்துறை இணை அமைச்சர் கூறியது என்ன? 

எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி, இது தொடர்பான ஒரு கேள்விக்கு இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்தார். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தை மறுசீரமைக்க 8 ஆவது ஊதியக் குழுவில் இருந்து வித்தியாசமான ஒன்றை அரசாங்கம் வடிவமைக்கிறது என்பது உண்மைதான் என்று அவர் கூறினார். ஆனால், 8வது ஊதியக் குழு குறித்து இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மறுபரிசீலனை செய்ய ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்! 

புதிய சூத்திரம் என்ன?

இனி ஊழியர்களின் சம்பளம் Aykroyd சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படும். இந்த சூத்திரத்தின் மூலம், ஊழியர்களின் சம்பளம் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பணியாளரின் செயல்திறன் ஆகியவற்றுடன் இணைக்கப்படும். அதாவது, ஊழியர்களின் பதவி உயர்வும் அதற்கேற்ப செய்யப்படும். இருப்பினும், நிதி அமைச்சக அதிகாரி ஒருவர், பரிந்துரை நல்லது, ஆனால் அத்தகைய சூத்திரம் எதுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று கூறுகிறார். மறுபுறம், 8வது ஊதியக் குழுவும் எப்போது வரும் என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை

முன்னதாக, 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையில், அய்க்ராய்ட் ஃபார்முலாவின் படி ஊதிய அமைப்பை முடிவு செய்ய விரும்புகிறோம் என்று நீதிபதி மாத்தூர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விதியில் வாழ்க்கைச் செலவும் (காஸ்ட் ஆஃப் லிவிங்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை, 7,000 ரூபாயில் இருந்து, 18,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலை குறியீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என, நீதிபதி மாத்தூர் பரிந்துரையில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News