8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.  

Written by - RK Spark | Last Updated : Aug 8, 2022, 06:30 AM IST
  • 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
  • கமிஷன்க்கு பதிலாக பதவி உயர்வு விதிகளை அரசு மாற்றலாம்.
  • விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்! title=

7-வது ஊதிய குழுவிற்கு பிறகு தங்களுக்கு குறைவான சம்பளமே கிடைக்கப்பெறுவதாக மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர், அதனால் மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதிய குழுவிற்காக காத்திருக்கின்றனர்.  இந்நிலையில்  பிரதமர் மோடியும் 8வது ஊதியக்குழு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார், அதன்படி 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவதை அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.  

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அத்தகைய திட்டம் எதுவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று கூறியிருந்தார்.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்ய 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது உண்மையா என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!

அதற்கு பதிலளித்தவர் பில்ஹார் அரசு அதுபோன்ற எந்தவொரு விஷயம் பற்றியும் கலந்தாலோசிக்கவில்லை செய்யவில்லை என்று அரசு பதிலளித்துள்ளதாக அவர் கூறினார்.  இந்நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறுகையில், ஊதிய மேட்ரிக்ஸில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் இதற்கு அடுத்த ஊதியம் தேவையில்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டிய அக்ராய்டு ஃபார்முலாக்களின் அடிப்படையில் அதை மதிப்பாய்வு செய்து திருத்தலாம், அதாவது பதவி உயர்வு விதிகளை அரசு மாற்றலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News