வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...!

உங்கள் வங்கி தொடர்பான பணிகள் நிலுவையில் இருந்தால், விரைவில் அதைச் செய்யுங்கள். ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் வங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை பெறவுள்ளது!

Last Updated : Sep 14, 2019, 08:54 AM IST
வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...! title=

உங்கள் வங்கி தொடர்பான பணிகள் நிலுவையில் இருந்தால், விரைவில் அதைச் செய்யுங்கள். ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் வங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை பெறவுள்ளது!

வரும் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், வங்கிகள் இரண்டு நாள் தேசிய வேலைநிறுத்தத்தைக் அனுசரிகின்றன. இதில் அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வங்கிகள் செயல்படுவதில் மந்தம் நிலை காணப்படும். இருப்பினும், வங்கி ஊழியர்கள் தொடர்பான அமைப்புகள் இன்னும் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்பதால் வேலைநிறுத்தம் தொடர்பான தகவல்கள் உறுதியற்றதாகவே உள்ளது.

முன்னதாக, பொதுதுறை வங்கிளான பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் பிற 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த முடிவைக் கண்டித்து, வருகிற 25-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் (சண்டிகர்) தீபல் குமார் சர்மா தெரிவித்தார். 

இது தவிர, செப்டம்பர் 28-ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால், வங்கிகளில் எந்த வேலையும் இருக்காது, தொடர்ந்து செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கும். எனவே செப்டம்பர் 26 துவங்கி 29-ஆம் தேதி வரை என நான்கு நாட்கள் வங்கிகள் வேலை தடைபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, உங்கள் வங்கி தொடர்பான பணிகள் நிலுவையில் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட இந்த நாட்களுக்கு முன்னதாக வங்கி பணிகளை முடித்துவிடுவது நல்லது.

Trending News