பழைய ஓய்வூதிய திட்டம் சூப்பர் செய்தி: ஊழியர்களுக்கு கிடைக்கும் முத்தான் 3 ஆப்ஷன்ஸ்!! விவரம் இதோ

Old Pension Scheme: ஊழியர்களின் நலன் கருதி அரசு மற்றும் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மூன்று விதமான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து வருகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2023, 05:00 PM IST
  • முதல் தீர்வு - பழைய ஓய்வூதியம் போன்ற கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி தொகை.
  • இரண்டாவது தீர்வு - குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பிஎஸ்ஸிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  • மூன்றாவது தீர்வு - அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம்.
பழைய ஓய்வூதிய திட்டம் சூப்பர் செய்தி: ஊழியர்களுக்கு கிடைக்கும் முத்தான் 3 ஆப்ஷன்ஸ்!! விவரம் இதோ title=

பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்தி: அரசு ஊழியர்களிடையே அதிகரித்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவையை மத்திய அரசு மனதில் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை தனது மாநிலங்களவை உரையின் போது, ​​பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் குறிப்பிட்டு, அண்டை நாடுகளில் உள்ள பொருளாதார நெருக்கடி குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பல மாநிலங்கள் சமீப காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்தியுள்ளன. அரசியல் ஆதாயங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்றும் ஆவர் தெரிவித்தார். மாநிலங்கள் நிதி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) தேர்தல் பிரச்சினையாகி வருவதும் இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. அதற்கு முன்னர் ஊழியர்களின் நலன் கருதி அரசு மற்றும் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மூன்று விதமான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து வருகின்றன. 

1. முதல் தீர்வு - பழைய ஓய்வூதியம் போன்ற கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி தொகை

பழைய ஓய்வூதியத்தைப் போல கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி அளவு தொகையை ஓய்வூதியமாக பெறுவதே முதல் தீர்வாக உள்ளது. ஆனால் அதற்கான பங்களிப்பை ஊழியரிடமிருந்து பெறப்பட வேண்டும். ஆந்திராவில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சினை ஏற்கனவே அரசாங்கத்திற்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் (PFRDA) இடையே விவாதிக்கப்பட்டது.

2. இரண்டாவது தீர்வு - குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பிஎஸ்ஸிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்

இரண்டாவது தீர்வு, தற்போதுள்ள என்பிஎஸ் -இல் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது. NPS பற்றிய புகார் என்னவென்றால், பணியாளரின் பங்களிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வருமானம் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஆனால் வாரிய அனுமதி நிலுவையில் உள்ளது. இருப்பினும், இதில் குறைந்தபட்ச வருமானம் 4 முதல் 5 சதவீதமாக இருக்கலாம் என்று அறிகுறிகள் உள்ளன. இது மிகக் குறைவானதாகவே இருக்கும். 

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்.... முக்கிய அப்டேட்: மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

உத்தரவாத ஓய்வுதியத்தால் செலவு அதிகரிக்கும். சந்தையில் நல்ல வருமானம் இருந்தால், ஓய்வூதியம் குறைந்தபட்ச வருவாயை விட 2-3 சதவீதம் அதிகமாக இருக்கும். இது தவிர, தற்போதைய NPS -இல், முதிர்வுத் தொகையில் 60% பணியாளருக்குச் செல்கிறது. இந்தப் பணத்தையும் ஓய்வூதியத்துக்குப் பயன்படுத்தினால், ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்.

3. மூன்றாவது தீர்வு - அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதம்

மூன்றாவது தீர்வு, அடல் பென்ஷன் யோஜனா போன்று அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாகும். PFRDA தற்போது இந்த திட்டத்தை நடத்தி வருகிறது, இதில் பங்களிப்பின் அடிப்படையில் ரூபாய் 1000 முதல் ரூ 5000 வரை ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் நோக்கத்தை அனைவருக்கும் விரிவுபடுத்தவும், ரூ. 5000 என்ற வரம்பை நீக்கவும் PFRDA தயாராக இருக்கலாம். உத்தரவாதத்தில் ஏதேனும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், உதவி வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும்.

மூன்று நடவடிக்கைகளையும் பரிசீலிக்கும் பொறுப்பு PFRDA க்கு உள்ளது. ஆனால் தற்போது அதன் புதிய தலைவரின் நியமனத்துக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். முந்தைய தலைவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. புதிய தலைவரை நியமித்த பிறகு இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

வியாழக்கிழமை மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை மீதான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' விவாதத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "நாங்கள் எங்கள் கொள்கைகளில் தேசிய முன்னேற்றத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம், மேலும் பிராந்திய அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்துள்ளோம்" என்றார். "எங்கள் கொள்கை தேசிய முன்னேற்றம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளின் சரியான கலவையை பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் முடிவை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சந்தோஷத்தில் திளைக்கும் ஊழியர்கள்... ஊதியத்தை அதிகரித்த மாநில அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News