டிச., 31-க்குள் வருமான வரி செலுத்தவில்லை என்றால் 10,000 வரை அபராதம்!

உங்கள் வருமான வரி அறிக்கையை டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2020, 09:16 AM IST
டிச., 31-க்குள் வருமான வரி செலுத்தவில்லை என்றால் 10,000 வரை அபராதம்! title=

உங்கள் வருமான வரி அறிக்கையை டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்..!

கொரோனா தொற்றுநோய் காரணமாக, வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் பல முறை நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, 2019-20 ஆம் ஆண்டுக்கான வரிவிதிப்புகளை (FY 2020-21) டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் ITR-யை தாக்கல் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வரி டெபாசிட் செய்யாததால் வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

10 ஆயிரம் அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும்

டிசம்பர் 31-க்குப் பிறகு ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டால், வரி செலுத்துவோர் அபராதமாக ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இல்லாத வரி செலுத்துவோர் தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டும்.

ALSO READ | WhatsApp மூலம் சமையல் எரிவாயு முன்பதிவு செய்பவர்களுக்கு ₹.500 தள்ளுபடி!

தாமதமாக IRT தாக்கல் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது

IRT தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், வரி செலுத்துவோர் அபராதம் மற்றும் பல வகையான வருமான வரி விலக்குகளை செலுத்த வேண்டும். இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு -10 ஏ மற்றும் பிரிவு -10 பி ஆகியவற்றின் கீழ் விலக்கு அளிக்காது. அதே நேரத்தில், பிரிவு 80 IA, 80IAB, 80IC, 80ID மற்றும் 80IE ஆகியவற்றின் கீழ் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்காது. இது தவிர, வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்வதால் பிரிவு 80 IAC, 80IBA, 80JJA, 80JJAA, 80LA, 80P, 80PA, 80QQB மற்றும் 80RRB ஆகியவற்றின் கீழ் விலக்கின் பயனைப் பெற முடியாது.

ALSO READ | CBSE Exams 2021: தேர்வுகள் ஜனவரியில் இருக்கலாம், நுழைவுச்சீட்டை பதிவிறக்க வழி

வரி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?

நீங்கள் வருமான வரி செலுத்தவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். நீங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்த நிதி ஆண்டில் தற்போதைய மதிப்பீட்டு ஆண்டின் இழப்பை நீங்கள் எடுக்க முடியாது. அத்தகையவர்களுக்கு வரி கணக்கீட்டின் மதிப்பில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், அதிக மதிப்புள்ள வழக்குகள் 7 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடும்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Linkhttps://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News