டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோ

IRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2024, 09:53 AM IST
  • சிறப்பு ரயில் பயணத் தொகுப்பூ வெளியீடு.
  • புனிதமான இந்து கோவில்களில் ஒன்றானது மாதா வைஷ்ணோ தேவி.
  • மாதா வைஷ்ணோ தேவி ஆலயம் சுமார் 5.200 அடி உயரத்தில் ஜம்முவில் அமைந்துள்ளது.
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோ title=

IRCTC Mata Vaishno Devi Special Package: புனிதமான இந்து கோவில்களில் ஒன்றான மாதா வைஷ்ணோ தேவி (Mata Vaishno Devi) கோவில், அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணோ தேவி ஆலயம் சுமார் 5.200 அடி உயரத்தில் ஜம்முவில் அமைந்துள்ளது. தினமும் தேவியின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். மாதா வைஷ்ணோ தேவிக்கான பயணம் மிகவும் புனிதமான யாத்திரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் நீங்களும் இந்த மாதம் தேவியை தரிசிக்க வர (Travel Plan For Vaishno Devi) திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், ஐஆர்சிடிசி (IRCTC) தற்போது மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு ஒரு சிறப்பு ரயில் பயணத் தொகுப்பை (IRCTC Train Tour Package) வெளியிட்டுள்ளது, அதில் நீங்கள் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

ஐஆர்சிடிசியின் இந்த ரயில் டூர் பேக்கேஜின் பெயர் மாதா வைஷ்ணோதேவி EX டெல்லி (வார இறுதி) (NDR01W) - MATA VAISHNODEVI EX DELHI (WEEK-END) (NDR01W) ஆகும். இந்த ரயில் பயண தொகுப்பு 3 இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கானது. இந்த பேக்கேஜ் நாட்டின் தலைநகரமான டெல்லியில் இருந்து இந்த மாதம் 26ஆம் தேதி அதாவது நாளை தொடங்கும். பயண முறை ரயிலில் இருக்கும், இதில் புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஜம்மு ரயில் நிலையத்திற்கு மூன்றாவது ஏசி டிக்கெட்டை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?

IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில் என்னென்ன வசதிகள் மற்றும் எந்தெந்த இடங்கள் கவர் செய்யப்படும்?
ஐஆர்சிடிசியின் இந்த சிறப்பு ரயில் பயணத் தொகுப்பில், நீங்கள் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்வீர்கள். இந்த பேக்கேஜில் 2 இரவுகள் ரயிலிலும், ஒரு இரவு கத்ராவில் ஏசி அறையுடன் கூடிய ஹோட்டலில் தங்கலாம். உணவுத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த பேக்கேஜில் 1 APAI மற்றும் 1 காலை உணவு வழங்கப்படும். இது தவிர, இந்த பேக்கேஜில் நீங்கள் ஏசி அல்லாத வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதுமட்டுமின்றி இந்த பேக்கேஜில் நீங்கள் கண்ட கண்டோலி கோவில், ரகுநாத்ஜி கோவில், பாக்-இ-பாகு தோட்டம் போன்றவற்றையும் பார்க்க முடியும். இது தவிர, இந்த டூர் பேக்கேஜின் விலையில் ஜிஎஸ்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் பயணத் தொகுப்பின் கட்டணத்தை பற்றி நாம் பேசுகையில், ஒருவர் பயணம் செய்ய ரூ.13,300 கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் இரண்டு பேருக்கு ரூ.9,670 மற்றும் ட்ரிபிள் ஷேரிங்கில் ரூ.8,160 கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கையுடன் ரூ.7,250ம், 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை இல்லமல் ரூ.5,800ம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சிறப்பு ரயில் பேக்கேஜில் முன்பதிவு செய்ய நீங்கள் நினைத்தால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நீங்களே முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Kotak Mahindra Bank: இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News