ஆபத்து இல்லாமல் பம்பர் வருமானத்தை அள்ளித்தரும் 2 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்

Post Office Schemes: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2023, 09:02 PM IST
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் அஞ்சலகம் முதலீடு செய்ய வேண்டிய தொகைக்கு உச்ச வரம்பு எதையும் நிர்ணயிக்கவில்லை.
  • திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம்.
  • ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களில் ரூ.20 லட்சத்தைப் பெறலாம்.
ஆபத்து இல்லாமல் பம்பர் வருமானத்தை அள்ளித்தரும் 2  தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்: தபால் அலுவலகம் அனைத்து பிரிவு மக்களின் தேவைக்கேற்ப சிறு சேமிப்புத் திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அஞ்சல் அலுவலக திட்டங்களில் மிக பாதுகாப்பான இரண்டு திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

கிசான் விகாஸ் பத்ரா:

தபால் அலுவலக திட்டங்களில் அதில் ஒரு பிரபலமான மற்றும் முக்கியமான சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்ரா திட்டமாகும். அதிக ஆபத்து இல்லாமல் நல்ல வருமானம் பெற எண்ணும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதாக இருக்கும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை அதிக ரிஸ்க் எடுக்காமல், ஆபத்தற்ற திட்டத்தில் சேமிக்க எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு இது நல்ல ஒரு திட்டமாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டியை அளிக்கிறது. நீண்ட கால சேமிப்பில் இது அவர்களின் பணத்தை இரட்டிப்பாக்குகிறது.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் (Kisan Vikas Patra Scheme) கீழ், வாடிக்கையாளர்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வைப்புத் தொகையில் கூட்டுத்தொகைக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு நபர் இதில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் அஞ்சலகம் முதலீடு செய்ய வேண்டிய தொகைக்கு உச்ச வரம்பு எதையும் நிர்ணயிக்கவில்லை. திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், மொத்தம் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் அதாவது 115 மாதங்களில் ரூ.20 லட்சத்தைப் பெறலாம்.

தபால் அலுவலகம் இந்த கணக்கை ஒற்றை மற்றும் கூட்டு (Single and Joint) இரண்டிலும் திறக்க விருப்பம் அளிக்கிறது. கூட்டுக் கணக்கை மூன்று பேர் சேர்ந்து தொடங்கலாம். கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன் இறந்துவிட்டால், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை நாமினி அல்லது வாரிசுக்கு வழங்கப்படும். அதேசமயம், நீங்கள் முதிர்வுக்கு முன் கணக்கை மூட விரும்பினால், 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்குப் பிறகு அதைச் செய்யலாம்.

மேலும் படிக்க | OPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? எதில் அதிக நன்மைகள் உள்ளன?

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்

பாதுகாப்பான வருமானம் அளிக்கும் ஒரு பயனுள்ள அஞ்சல் அலுவலக திட்டம் ஒன்று உள்ளது. தபால் அலுவலகத்தின் இந்த அருமையான திட்டம் மாதாந்திர வருமானத் திட்டம் ( Post Office MIS) ஆகும். இதில் மொத்தத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீட்டில் சந்தை ஏற்ற இறக்கங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். எம்ஐஎஸ் கணக்கில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும்.

தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், 1,000 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். ஒற்றை (சிங்கிள்) மற்றும் கூட்டு கணக்குகள் (ஜாயிண்ட் அகவுன்ட்) இரண்டையும் இதில் திறக்கலாம். சிங்கிள் அகவுண்டில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். தபால் அலுவலகத்தின்படி, கணக்கு தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்ததிலிருந்து முதிர்வு வரை ஒவ்வொரு மாதமும் MIS இல் வட்டி செலுத்தப்படுகிறது. எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் ஜூலை 1, 2023 முதல் 7.4 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commisison ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இந்த தேதியில் அறிவிப்பு.. எகிறப்போகும் டிஏ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News