Blue Aadhaar Card: ப்ளூ ஆதார் கார்டு யாருக்கு... எப்படி விண்ணப்பிப்பது?

Blue Aadhaar Card: அனைவரும் சாதரண ஆதார் அட்டையை அறிந்திருப்பீர்கள், ஆனால் நீல நிற ஆதார் அட்டை குறித்து பெரிதாக பலருக்கு பரிட்சையம் இருக்காது. எனவே, நீல நிற ஆதார் அட்டை குறித்து இங்கு அறிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2023, 10:26 AM IST
  • நீல நிற ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.
  • 2018இல் நீல நிற ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
Blue Aadhaar Card: ப்ளூ ஆதார் கார்டு யாருக்கு... எப்படி விண்ணப்பிப்பது? title=

Blue Aadhaar Card: ஆதார் அட்டை இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இதில் பல அடையாளச் சான்றுகள் உள்ளன. கைரேகை விவரங்கள், முகவரி, தொலைத்தொடர்பு விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கும். 

ஆதார் அட்டைகளில் தனித்துவமான 12 இலக்க எண் உள்ளது. இது ஆதார் அல்லது UID எண் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆவணம் நாட்டின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக இது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறும்போது இது மிக முக்கியமான முகவரி சான்றுகளில் ஒன்றாகும்.

முன்னதாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் அல்லது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வசதி இல்லை. 2018ஆம் ஆண்டில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. பால்ய ஆதார் அட்டை (Bhal Adhaar Card) என்றும் அழைக்கப்படும் நீல நிற ஆதார் அட்டை, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பால்ய ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இருப்பினும், பெற்றோர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதனை நீட்டிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், குழந்தைக்கு ஐந்து வயது ஆன பிறகும் பால்ய ஆதார் அட்டையை சரியான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளின் ஆதார் விவரங்களுக்குத் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. 

மேலும் படிக்க | தவறான பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா? அப்போ இதை படியுங்கள்

தேவையான ஆவணங்கள்?

பால்ய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, பெற்றோர்கள் சில ஆவணங்களை பதிவு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கீகார நோக்கங்களுக்காக, பயனர்கள் ஆவணங்களை அவற்றின் அசல் வடிவத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பயனர்கள் இந்த ஆவணங்கள் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவற்றின் நகல்களை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆதார் அட்டை தயாரிக்கப்படும் குழந்தையை பெற்றோர் கண்டிப்பாக அழைத்து வர வேண்டும். 

பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை, முகவரிச் சான்று மற்றும் பள்ளி அடையாள அட்டை (குழந்தை பள்ளியில் படித்தால்) அவற்றை எடுத்து வரவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பயனர்கள் நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அருகிலுள்ள ஆதார் மையத்தை அவர்கள் சரிபார்க்கலாம். இதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியலையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஆதார் அட்டைப் பதிவுச் செயல்முறையைத் தொடர்வதற்கு முன், தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது. 

மேலும் படிக்க | 2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News