இந்துகளின் திருவிழாவான ராம் நவமி மேளா ரத்து செய்யப்படுமா? குழப்பத்தில் மக்கள்!

கொரோனா பாதிப்பை அடுத்து பெரிய மத சபைகளைத் தவிர்ப்பதற்கு உத்தரபிரதேச அரசாங்கம் ஆலோசனைகள் வெளியிட்டுள்ளது, இருந்தபோதிலும் அயோத்தி நிர்வாகம் இன்னும் ராம் நவமி மேளாவை ரத்து செய்யவில்லை.

Last Updated : Mar 18, 2020, 07:58 AM IST
இந்துகளின் திருவிழாவான ராம் நவமி மேளா ரத்து செய்யப்படுமா? குழப்பத்தில் மக்கள்! title=

கொரோனா பாதிப்பை அடுத்து பெரிய மத சபைகளைத் தவிர்ப்பதற்கு உத்தரபிரதேச அரசாங்கம் ஆலோசனைகள் வெளியிட்டுள்ளது, இருந்தபோதிலும் அயோத்தி நிர்வாகம் இன்னும் ராம் நவமி மேளாவை ரத்து செய்யவில்லை.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க திட்டமிடப்பட்ட இந்த ஒன்பது நாள் திருவிழா இவதுவரை ரத்து செய்யப்படாதது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், இதன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

வருடாந்த திருவிழா ஒன்பது நாள் இந்து திருவிழாவாகும், நவராத்திரத்தின் முதல் நாளான மார்ச் 25 முதல் தொடங்கி ஏப்ரல் 2 வரை தொடரும். ஒன்பது நாள் ராம் நவ்மி கண்காட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும், அயோத்தியில் மேளா ஏற்பாடு செய்யப்படுகிறது, மேலும் இந்த திருவிழாவில் அயோத்திலிருந்து மட்டுமல்லாமல், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பங்கேற்கின்றனர்.

ஆனால் சமீபத்தில்., உத்திர பிரதேச அரசாங்கம் பெரிய சபைகளைத் தவிர்ப்பது குறித்து பொது சுகாதார ஆலோசனைகளை வெளியிட்டது. என்ற போதிலும் இதுவரை இந்த திருவிழா ரத்து செய்யப்படாதது நகரத்தில் ஒரு கூட்டத்தின் தாக்கம் குறித்து கவலையை எழுப்பியுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று, முதல்வர் ஆதித்யநாத் கோயில்கள், மசூதிகள் மற்றும் பிற மத இடங்களில் பெரிய கூட்டங்களைத் தடுக்க அனைத்து மத குருக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து சுற்றுலா இடங்களையும் அருங்காட்சியகங்களையும் மார்ச் 31-வரை மூடவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தற்போது ராம் நவமி குறித்து குறிப்பிட்டுள்ள அயோத்தி மாவட்ட நீதவான் அனுஜ் ஜா., “நிலைமை கண்காணிக்கப்படுகிறது, சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News