Diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு 'அமிர்தமாகும்' அதிமதுரம்!

ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வேகமாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலும் ஆயுர்வேதத்தின் மீது மக்களின் நம்பிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 08:40 PM IST
  • ரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிமதுரம் ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது.
  • அதிமதுரத்தின் கஷாயம் சிறுநீரக பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
  • மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
Diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு 'அமிர்தமாகும்' அதிமதுரம்! title=

அதிமதுரம் நன்மைகள்: ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வேகமாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலும் ஆயுர்வேதத்தின் மீது மக்களின் நம்பிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆயுர்வேதத்தின் சிறப்பு என்னவென்றால், அலோபதி மருந்துகளுடன் ஒப்பிடும்போது அதன் மருந்துகள் உடலில் பக்கவிளைவுகளை மிகக் குறைவாகக் காட்டுகின்றன அல்லது அவற்றின் பக்க விளைவுகள் மிகக் குறைவு என்று கூறுகின்றன. ஆபத்தான பல நோய்களை வேரறுக்கும் அத்தகைய ஒரு ஆயுர்வேத மருந்தை பற்றி தான் இன்று உங்களுக்கு சொல்ல போகிறோம். இதனை உட்கொள்வதால் உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு 'அமிர்தமாகும்' அதிமதுரம்

ஆயுர்வேத வல்லுநர்கள் அதிமதுரம் பல நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டது என்று கூறுகிறார்கள். காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து அதிமதுரத்தின் பயன்பாடு நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிமதுரம் ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது. சர்க்கரை நோயாளிகள்அதிமதுரத்தை கஷாயம்  செய்து  குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் சிறந்த முறையில் பலனடைவார்கள் என கூறப்படுகிறது. இதனால் உடலில் இன்சுலின் சமநிலை நிலைத்திருக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘துத்தநாக’ குறைப்பாடு!

மன அழுத்தத்தை குறைக்கிறது

இன்றைய வாழ்க்கைச் சுமை மற்றும் வேலைப்பளு காரணமாக, பெரும்பாலான மக்களிடம் மன அழுத்தம் காணப்படுகிறது. அதிமதுரத்தை  கஷாயமாக்கி குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதில் உள்ள ஸ்வார்டியா மார்ட்டின் என்ற தனிமம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு அதிமதுரத்தின் கஷாயம் கல்லீரலை நச்சு நீக்கவும் வேலை செய்கிறது. இதை உட்கொள்வது மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் அதிமதுரத்தின் கஷாயம் சிறுநீரக பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் மலேரியாவின் ஆபத்தை குறைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News