கோடையில் எந்த நேரத்தில் தயிர் சாப்பிட வேண்டும்? நோய்களை விரட்டும் அற்புத மருந்து

கோடைகாலத்தில் சரியான நேரத்தில் தயிர் சாப்பிட்டால், சில நோய்களை விரட்டும் அற்புத மருந்தாகவும் அது செயல்படும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 12:31 PM IST
  • கோடைகாலத்தில் தயிர் சாப்பி பழகிக் கொள்ள வேண்டும்
  • தயிர் உடலுக்கு தேவையான குளிர்ச்சியைக் கொடுக்கும்
  • இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்
கோடையில் எந்த நேரத்தில் தயிர் சாப்பிட வேண்டும்? நோய்களை விரட்டும் அற்புத மருந்து title=

தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கோடை காலத்தில், மற்ற உணவுகளைவிட தயிர் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. லாக்டோஸ், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் அதிகம். ஆனால் இதனை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம். 

இது குறித்து பேசிய உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங், தயிர் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், தயிர் சாப்பிடுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றனர். பொதுவாக தயிர் செரிமான அமைப்பைச் சரியாக வைத்திருக்க உட்கொள்ளப்படுகிறது. இதைவிடவும் பல அற்புதமான நன்மைகளும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கின்றன.

மேலும் படிக்க | இந்தியாவில் அதிகளவில் விற்பனையாவது இந்த பீர்கள் தான்!

கோடையில் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

1. பிறப்புறுப்பு தொற்று நீங்க

தயிர் சாப்பிடுவது உண்மையில் பெண்களுக்கு யோனி ஈஸ்ட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. ஏனெனில் தயிரில் லாக்டோபாகிலஸ் பாக்டீரியா உள்ளது. இது யோனி தொற்றுகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அடிக்கடி பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், இன்று முதல் தயிர் சாப்பிடத் தொடங்குங்கள். உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

2. எடை குறைக்க 

உங்கள் எடையை குறைக்க தயிர் உதவுகிறது. இது உடல் எடையை குறைக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நம் உடலில் கார்டிசோல் மற்றும் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதன் மூலம் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை கட்டுப்படுத்தப்படுகிறது. 

3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவாகும். இது நமது குடலுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. தயிரில் உள்ள பண்புகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டது. இது கிருமிகளைக் கொல்லவும், நோய் எதிர்ப்புச் சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

4. எலும்புகளை பலப்படுத்தும் 

தயிரில் கால்சியம் மட்டுமின்றி, பாஸ்பரஸும் அதிகம் இருப்பதால், இந்த இரண்டு சத்துக்களும் நமது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி, கீல்வாதத்தைத் தடுக்கவும் தயிர் உதவுகிறது.

மேலும் படிக்க |  மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த 6 அறிகுறிகள் தோன்றுமாம்

5. இதயத்திற்கும் ஆரோக்கியமானது

தயிர் கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அதனால் உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இந்த நேரத்தில் தயிர் சாப்பிட வேண்டாம்

தயிர் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. எனவே, இரவில் தயிர் சாப்பிட்டால் சளி, உடல் பருமன், தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

தயிர் சாப்பிட சரியான நேரம் எது?

தயிர் எப்பொழுதும் காலை உணவுடன் சாப்பிட வேண்டும். பகலில் தயிர் சாப்பிடுவதால், உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு; தகவல்களின் அடிப்படையில் எழுத்தப்பட்டவை. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை)

Trending News