எலுமிச்சை ஜூஸ் ரொம்ப நல்லது...ஆனா அதிகமானா ரொம்ப ஆபத்து: ஜாக்கிரதை!!

Side Effects of Lemon Juice: வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ பல பக்க விளைவுகள் ஏற்படும் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2023, 03:31 PM IST
  • எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொள்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
  • அதிகப்படியான வைட்டமின் சி இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை அதிகமாக அதிகரிக்கலாம்.
  • எலுமிச்சம்பழ சாற்றை அதிக அளவில் குடிப்பதால் எலும்புகள் பலவீனமடையும்.
எலுமிச்சை ஜூஸ் ரொம்ப நல்லது...ஆனா அதிகமானா ரொம்ப ஆபத்து: ஜாக்கிரதை!! title=

எலுமிச்சை ஜூசின் பக்க விளைவுகள்: எலுமிச்சை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் வெப்பத்திலிருந்து விடுபட எலுமிச்சை நீரை மக்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எடையையும் கட்டுப்படுத்தவும்  செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. ஆனால் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது சில சமயம் உங்களுக்கு தீங்கையும் விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ பல பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

1. எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொள்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏனெனில் இது புரதத்தை உடைக்கும் நொதியில் பெப்சினை செயல்படுத்துகிறது. அதே நேரத்தில், பெப்டிக் அல்சர் உள்ளவர்கள் இதை அதிகமாக உட்கொண்டால் நிலைமை ஆபத்தானதாக மாறலாம்.

2. எலுமிச்சை தண்ணீர் குடிப்பதாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். நீங்கள் எலுமிச்சைப் பழ நீரை குடிக்கும்போது, ​​அது சிறுநீரின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இந்த செயல்பாட்டில், பல எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. இதனால் உங்களுக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படலாம். எலுமிச்சைப் பழத்தை அதிகமாக உட்கொள்வது பொட்டாசியம் குறைபாட்டையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | பெண்கள் இரவில் 'அதை' அணிந்துகொண்டு தூங்குவது சரியா? தவறா?

3. அதிகப்படியான வைட்டமின் சி இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை அதிகமாக அதிகரிக்கலாம். இது ஆபத்தானது. உங்கள் உள் உறுப்புகளை இது சேதப்படுத்தலாம்.

4. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது தவிர போதுமான அளவு ஆக்சலேட் உள்ளது. இதை அதிகப்படியாக உட்கொண்டால், இது படிக வடிவில் உடலில் குவிந்து, சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும்.

5.எலுமிச்சம்பழ சாற்றை அதிக அளவில் குடிப்பதால் எலும்புகள் பலவீனமடையும். எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளது. இதன் காரணமாக இது எலும்புகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

6. எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொள்வது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். எலுமிச்சையில் அதிக அளவு அமிலம் உள்ளது. இதனை உட்கொள்வதால் உடலில் அமிலத்தின் அளவு அதிகரிக்கலாம்.

7. உங்களுக்கு டான்சில் பிரச்சனை இருந்தால், எலுமிச்சைப் பழத்தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். எலுமிச்சை நீரை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது தொண்டை வலிக்கு காரணமாகிவிடும் என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News