2020 ஏப்ரல் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை விநியோகம்...

சத்தான உணவை வழங்கும் முயற்சியில், 2020 ஏப்ரல் முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகளை விநியோகிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Nov 21, 2019, 03:34 PM IST
  • கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2020 ஏப்ரல் 1 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டைகளை வழங்க முன்மொழிந்துள்ளது.
  • முட்டை சாப்பிடுவது தன்னார்வமாக இருக்கும் என்றும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு பழங்கள் வழங்கப்படும்.
  • என்றபோதிலும் மத்திய பிரதேச அரசின் இந்த முயற்சியை பாஜக எதிர்த்துள்ளது.
2020 ஏப்ரல் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை விநியோகம்... title=

சத்தான உணவை வழங்கும் முயற்சியில், 2020 ஏப்ரல் முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகளை விநியோகிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2020 ஏப்ரல் 1 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டைகளை வழங்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், முட்டை சாப்பிடுவது தன்னார்வமாக இருக்கும் என்றும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு பழங்கள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 10 லட்சம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ .113 கோடி செலவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் நிதி தொடர்பான கோப்புகளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) நிதித் துறைக்கு தற்போது அனுப்பவுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் வாதம், குழந்தைகளில் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதாகும், மேலும் பழங்கள் மற்றும் பாலுடன் முட்டைகளை உட்கொள்வதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளது. தற்போது, ​​நாட்டில் ஒன்பது மாநிலங்களில் ஒன்று முதல் ஐந்து நாட்களுக்கு முட்டைகளை வழங்குகின்றன. இதில் தமிழகமும் அடங்கும்.

என்றபோதிலும் மத்திய பிரதேச அரசின் இந்த முயற்சியை பாஜக எதிர்த்துள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மத்திய பிரதேச அரசாங்கத்தின் இத்திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் இத்திட்டத்தை எதிர்கிறோம், மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். எனவே இத்திட்டம் குறித்த எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி இதுகுறித்து தெரிவிக்கையில்., இந்த முடிவின் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். "மாநிலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை முடிவுக்குக் கொண்டுவர பாஜக அரசாங்கமும் பல முக்கிய முயற்சிகளை எடுத்தது, அதற்காக நாங்கள் பல சர்வதேச விருதுகளையும் வென்றோம். மாநில அரசின் இந்த முடிவு ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று நாங்கள் கருதுகிறோம். மதத்திற்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் கலாச்சாரம் அழியும். நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோழி மற்றும் பாலை ஒருவருக்கொருவர் விற்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சியையும் நாங்கள் தடுத்தோம் ... நாட்டில் உள்ள கலாச்சாரத்திற்கு ஏற்ப மாநில அரசு செயல்பட வேண்டும்," என கோத்தாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News