இன்று புகையிலை தினம்: புகையிலை பற்றி அறிவோம்!!

Last Updated : May 31, 2017, 03:07 PM IST
இன்று புகையிலை தினம்: புகையிலை பற்றி அறிவோம்!! title=

மே 31-ம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாருங்கள்  புகையிலை பற்றி அறிவோம்.

ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.

புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம். 

கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடளில் ஊனமும் ஏற்படலாம்.

> ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர். 

> ஆண்டுக்கு சராசரி 83 சதவீதம் பேர் புகையிலையினால் மடிகின்றன.

> இறப்பவர்களில் 15% பேர் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகிறார்கள். 

> உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.

> புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட முன்னதாகவே இறந்துபோகிறார்கள்.

> அறியாமலே சிகரெட்டிற்காக சிகரெட்டிற்காக பெரும்தொகையினை செலவிடுகின்றனர் சொல்லபோனால் தன் காசு கொடுத்து தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர்.

> புகை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.

> உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது.

எனவே புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு வேண்டும். முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது. புகை பிடிப்பவரின் அருகில் இருந்து தள்ளி இருப்பது. முக்கியமாக இளம் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

Trending News