வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

மகாராஷ்டிராவின் நேற்று மட்டும் நடந்த சாலை விபத்தில் 13 பேர் மரணம்; 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Last Updated : Nov 30, 2019, 11:16 AM IST
வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்! title=

மகாராஷ்டிராவின் நேற்று மட்டும் நடந்த சாலை விபத்தில் 13 பேர் மரணம்; 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

மகாராஷ்டிராவின் இருவேறு மாவட்டங்களில் சனிக்கிழமை நடந்த இரண்டு சாலை விபத்துக்களில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துலேவில், வின்சூர் அருகே ஆற்றில் பாலத்தில் இருந்து பிக்கப் வாகனம் விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புனே-மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள ராசாயணி நகரத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பயணித்த கார் ஒன்று எரிவாயு டேங்கர் மீது மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

அதிகாலை 4:45 மணியளவில் சாங்லி மாவட்டத்தில் இருந்து வந்த கார் பின்னால் இருந்து எரிவாயு டேங்கரை மோதியதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

 

Trending News