மத்திய பிரதேசத்தில் 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

மத்திய பிரதேசத்தில்19 வயது சிறுமியை தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 6, 2018, 03:42 PM IST
மத்திய பிரதேசத்தில் 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!! title=

மத்திய பிரதேசத்தில்19 வயது சிறுமியை தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவர் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொழிற்சாலையின் உரிமையாளரிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுபோன்ற சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 19வயது மாணவியை நான்கு பேர் கொண்டகும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Trending News