முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை: ஏர் இந்தியா நிறுவனம்

Last Updated : Aug 16, 2017, 10:21 AM IST
முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை: ஏர் இந்தியா நிறுவனம் title=

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் ஏறுவதற்கு முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ரூ ஏர் இந்தியா நிறுவனம் புதிய  திட்டத்தை தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் அஸ்வானி லோஹனி கூறுகையில், இந்த அறிவிப்பு மூலம் நுழைவாயில்களில் பாதுகாப்பு படை வீரர்களே உள்ளே செல்ல முதலில் அழைக்கப்படுவார்கள். முதல்வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு முன்பாக வீரர்கள் அழைக்கப்படுவார்கள். 

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த பைலட் கூறுகையில், “அமெரிக்க விமான நிலையங்களில் சொகுசு இருக்கைகள் கொண்ட இருக்கைகள் அறைகளில் அமர ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். இந்திய விமான நிலையங்களில் இந்த அறைகளில் அரசியல்வாதிகளே நிரம்பியுள்ளனர். அவர்கள் அமெரிக்க விமானங்களில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு நமது ராணுவ வீரர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் ராணுவ வீரர்களுக்காக உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News