Ramar Photo: அயோத்தி ராமரின் முதல் புகைப்படம்.. கருவறையில் வைக்கப்பட்ட சிலை - கண்கொள்ளாக் காட்சி

Ayodhya Ramar Idol First Photo Viral: அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Jan 19, 2024, 03:30 PM IST
  • வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
  • ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் செல்லலாம்.
Ramar Photo: அயோத்தி ராமரின் முதல் புகைப்படம்.. கருவறையில் வைக்கப்பட்ட சிலை - கண்கொள்ளாக் காட்சி title=

Ayodhya Ramar Temple Idol First Photo Viral: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன. 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அந்த வகையில், நேற்று ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலை நேற்று வைக்கப்பட்டது, அதன்மூலம், கும்பாபிஷேக விழா அதன் உச்சகட்டத்தை நெருங்கி வருகிறது எனலாம். 

சிறப்பான சிற்பி

சுமார் 51 அங்குல ராமர் சிலை கோவிலுக்கு நேற்று முன்தினம் (ஜன. 17) கொண்டுவரப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஐந்து தலைமுறைகளாக சிலை வடிவமைத்து வரும் குடும்பத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த சிலையை நேற்று கருவறையில் நிறுவியுள்ளனர்.

துணிகள் போர்த்தப்பட்டு, நேற்று கருவறையில் வைக்கப்பட்ட சிலையின் முதல் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படங்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊடக பொறுப்பாளர் சரத் சர்மா பகிர்ந்துள்ளார். கடவுள் ராமரின் அந்த சிலை 1.5 டன் எடை கொண்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட அந்த சிலையில், தாமரையின் மீது ஐந்து வயது குழந்தையாக ராமர் நிற்கிறார்.

மேலும் படிக்க | உலகின் முதல் போர்டபிள் ஹாஸ்பிடல் ஆரோக்ய மைத்ரி க்யூப்! அயோத்தியில் அறிமுகம்

பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வேத பிராமணர்கள் மற்றும் ஆச்சார்யர்கள் கோயிலின் வளாகத்திற்குள் வழிபாட்டு விழாக்களில் தலைமை தாங்குவதைக் காண முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா உறுப்பினர்களும் பிரார்த்தனையில் பங்கேற்றதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார். இது அடுத்த நாள் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம் என்றும், ராமருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த நாங்கள் விரும்ப மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி முதல் அனைவரும் வரலாம் என்றும் பிரதமர் மோடி பொதுமக்களை கேட்டுக் கொண்டார். 

பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு

11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கோயில் அறக்கட்டளையால் அழைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்திற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் கோயில் அறக்கட்டளையின் அனைத்து அறங்காவலர்கள், சுமார் 150 பிரிவுகளின் அந்தணர்கள் மற்றும் பொறியாளர் குழு என்று பெயரிடப்பட்ட கோயில் கட்டுமானத்துடன் தொடர்புடைய 500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.

மேலும் படிக்க | ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News