ரயில்வே பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; IRCTC-ன் அதிரடி அறிவிப்பு...

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு, யாரும் எதிர்பார்க்க அளவிற்கு ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது!...

Last Updated : Jan 5, 2020, 08:51 PM IST
ரயில்வே பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; IRCTC-ன் அதிரடி அறிவிப்பு... title=

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு, யாரும் எதிர்பார்க்க அளவிற்கு ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது!...

இந்த அறிவிப்பின் மூலம் பயணிகள் ரயில் மூலம் பயணம் செய்யும் போது அவர்கள் வீட்டிலிருந்து எதுவும் திருடப்பட்டிருந்தால், அவர்களுக்கு ரயில்வே இழப்பீடு தொகை அளிக்கும் என கூறப்படுகிறது. 

இந்திய ரயில்வேயின் சார்பு நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலுக்கான (தேஜாஸ்) அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த தேஜாஸ் ரயிலில் பயணிகளில் பயணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை இரண்டாவது தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்க ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. இது ஜனவரி 17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது, அதே நேரத்தில் பொது மக்களுக்கு இது ஜனவரி 19 அன்று தனது சேவையை துவங்கும். இந்த ரயிலில் பயணிகளின் வரவினை அதிகரிக்கும் பொருட்டு இந்த சிறப்பு வசதி வழங்கப்படுகிறது.

இந்த வசதியின் கீழ், பயணிகள் ஒரு ரயிலில் பயணம் செய்யும் போது, அந்த நேரத்தில் அவர்களது வீட்டில் ஏதேனும் திருட்டு நடந்தால், பயணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு அளிக்கப்படும். இதைப் பற்றிய மற்றொரு சிறப்பு என்னவென்றால், வீட்டிலுள்ள பொருட்களின் காப்பீட்டிற்கு நீங்கள் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்காக IRCTC லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரண்டாவது தேஜாஸ் ரயிலின் தொடக்க ஓட்டம் 2020 ஜனவரி 17-ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து கொடியேற்றப்படும். ரயிலின் வணிக ஓட்டம் 2020 ஜனவரி 19 முதல் அகமதாபாத்தில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தேஜாஸ் ரயிலை இயக்கும் IRCTC-யால் இயக்கப்படும் இந்த ரயில் பயணிகளுக்கு உயர் மட்ட வசதியை உறுதி செய்வதற்காக அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த முழு குளிரூட்டப்பட்ட ரயிலில் தலா 56 இருக்கைகள் கொண்ட இரண்டு நிர்வாக வகுப்பு நாற்காலி கார்களும், எட்டு நாற்காலி கார்கள் தலா 78 இருக்கைகளும் கொண்டதாக இருக்கும். ரயிலின் மொத்த சுமை திறன் 736 பயணிகளாக இருக்கும். இந்த தேஜாஸ் ரயிலில் நாடியாட், வதோதரா, பருச், சூரத், வாபி மற்றும் போரிவாலி ஆகிய இடங்களில் வர்த்தக நிறுத்தங்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இறுதி படுத்தப்படவில்லை. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • பயணம் செய்பவர்களின் பொருட்களை வீட்டிலிருந்து எடுத்து செலலும் சிறப்பு வசதி வழங்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது அலுப்பு ஏற்பட்டால், அதற்காக ரயிலில் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. 
  • ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உயர்தர உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டு டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும்.
  • ரயிலில் சேவை விமான சேவைகளைப் போன்ற தள்ளுவண்டிகள் மூலம் செய்யப்படும். ஒவ்வொரு பயணிகளுக்கும் தொகுக்கப்பட்ட குடிநீர் பாட்டில் கூடுதலாக ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு RO நீர் வடிகட்டி வழங்கப்படும்.
  • IRCTC-ல் ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ரயில் பயண காப்பீடு ரூ.25 லட்சம், IRCTC-யால் பதியப்பட்டு தரப்படும்.
  • தவிர, IRCTC ரயில் இயங்கும் போது, ​​ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகினால் ரூ.100 / - மற்றும் இரண்டு மணி தேரத்திற்கு மேல் தாமதமாகினால் ரூ. 250 / - இழப்பீடாக அளிக்கப்படும்.
  • ஒரு ரயில் ரத்துசெய்யப்பட்டால், உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் / அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ள மின்-டிக்கெட்டுகளில் முழு கட்டணத்தையும் தானாகவே திருப்பித் தரப்படும். அத்தகைய வழக்கில் டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது TTR தாக்கல் செய்யவோ தேவையில்லை.
  • ரயிலில் தட்கல் ஒதுக்கீடு அல்லது பிரீமியம் தட்கல் ஒதுக்கீடு இருக்காது. பொது ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். அதாவது, EC-ல் 6 இடங்களும், CC-யில் 12 இடங்களும் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா ஒதுக்கீடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும்.
  • ரயிலில் பயணிக்க Paytm, Phone Pay, Make Moy Trip, Google Pay, Ibibo மற்றும் Rail Passenger ஆகிய ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். ரயிலுக்கு முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாட்கள் ஆகும்.
  • விமான பணிப்பெண்களைப் போலவே, ரயிலிலும் பணிப்பெண்கள் பயணிகளுக்கு சேவை செய்வார்கள். 

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை IRCTC-ன் வலைத்தளம் www.irctc.co.in மற்றும் அதன் மொபைல் பயன்பாடான “IRCTC Rail Connect” ஆகியவற்றில் பிரத்தியேகமாக பதிவு செய்யலாம். ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு இருக்காது. IRCTC-யின் ஆன்லைன் பயண போர்டல் கூட்டாளர்கள் மூலமாகவும் இந்த ரயில் முன்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News