மம்தா பானர்ஜிக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்

சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 7, 2021, 12:50 PM IST
  • சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மனு.
  • மம்தா பேனர்ஜி, 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
  • இதனால், வானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம் title=

மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பெருபான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டாலும், ஆப்ஷரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட் என்ற கதையாக, நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நந்திகிராம் தொகுதியில் பண பலத்தின் மூலம் தான் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார்.  அதுமட்டுமல்லாது, நந்திகிராம் தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

ALSO READ | மேற்கு வங்க மக்கள் நலனுக்காக பிரதமர் மோடியின் காலில் விழத் தயார்: மம்தா பேனர்ஜி

கொல்கத்தா நீதிமன்றத்தில், இந்த மனு மீதான விசாரணைய  நீதிபதி கவுசிக் சந்தா  தலைமையிலான அமர்வு மேற்கொண்ட நிலையில்,  நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாக கூற அந்த அம்ர்வு இந்த மனுவை விசாரிக்க கூடாது என மம்தா பனர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகிய கவுஷிக் சந்தா, மம்தா பானர்ஜிக்கு  ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையை தவறாக சித்தரித்தற்காக இந்த அபராதம் விதிப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டபேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளா மம்தா பேனர்ஜி, 6 மாத காலத்திற்குள்  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இதனால், வானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் போட்டியிட ஏதுவாக, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சோபந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News