100 நாள் வேலைத் திட்டத்தில் இதெல்லாம் பண்ணலாமா?

மாநிலம் முழுவதும் 92 புதிய பள்ளி கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 06:15 PM IST
100 நாள் வேலைத் திட்டத்தில் இதெல்லாம் பண்ணலாமா? title=

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் 92 புதிய கட்டிடங்கள், 48 நவீன ஆய்வகங்கள் மற்றும் மூன்று நூலகங்களை திறந்து வைத்தார்.

காணொளி காட்சி மூலமாக ரூ. 237 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பினராயி விஜயன் துவக்கி வைத்தார். "கேரளாவில் 100 நாட்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 92 புதிய கட்டிடங்கள், 48 நவீன ஆய்வகங்கள் மற்றும் மூன்று நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்த செலவு 237 கோடி ரூபாய். 107 புதிய பள்ளி கட்டிடங்களுக்கு 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  214 கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டிடங்கள் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இவற்றில் 11 பள்ளிகள் ரூ. 5 கோடி செலவில் மற்றும் 23 பள்ளிகள் ரூ.3 கோடி செலவில் மற்றும் 58 பள்ளிகள் திட்ட நிதி, எம்எல்ஏ நிதி மற்றும் பிற நிதிகளை பயன்படுத்தி கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

kerala

kerala

மேலும், மாநில அரசு 48 உயர்நிலை ஆய்வகங்களை 22 கோடி ரூபாய்க்கும், மூன்று மேல்நிலை நூலகங்களை 85 லட்சத்திற்கும் கட்டி உள்ளது. "எங்கள் குழந்தைகள் மிக விரைவில் பள்ளிகளில் சேர முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். அவர்கள் பள்ளிகளை அடைந்ததும், அவர்கள் முன்பு பார்த்ததில் இருந்து ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவார்கள். இரண்டாம் வகுப்பு மாணவர் முதல் முறையாக பள்ளிக்குச் செல்வார்கள். அவர்கள் அனைத்து வசதிகளும் கொண்ட கல்வி நிறுவனங்களில் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளில், கேரளா கல்வித் துறையில் நிறைய சாதித்துள்ளது. ஐ.நா.வின் அறிக்கையின் படி, கொரோனா தொற்றால் 126 கோடி குழந்தைகளின் கல்வி  பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த மாணவர் கணக்கில் 72 சதவீதமாகும். இதில், 32 கோடி குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஊரடங்கால் 25 கோடி மாணவர்களின்  படிப்பு பாதிபடைதுள்ளதாக யுனிசெஃப் ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த சூழ்நிலையில் கூட நாங்கள் எங்கள் கல்வித் துறையை சிறப்பாக நிர்வகித்தோம். நாங்கள் தேர்வுகளை நடத்தினோம். பாதுகாப்பான முறையில் முடிவுகளை அறிவித்தது. நாங்கள் கூட பரீட்சைகளை நடத்தியதற்காக கேலி மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோம், "என்று விஜயன் கூறினார்.

kerala

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News