இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2018, 05:04 PM IST
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி title=

நேரடி வரி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியயும் மற்றும் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்து உள்ளது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 

கடந்த மூன்று ஆண்டுகளில் நேரடி வரி-ஜிடிபி விகிதத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலவுகிறது. 2017-18 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.98% ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நேரடி வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமாகும்.

 

கடந்த நான்கு நிதியாண்டில், அதாவது கடந்த 2013-14 நிதியாண்டில் 3.79 கோடியிலிருந்து 2017-18 நிதியாண்டில் 6.85 கோடி ரூபாயாக வரி தாக்கல் அதிகரித்துள்ளது.

வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடந்த 2013-14 நிதியாண்டில் 3.31 கோடியில் இருந்து 2017-18 நிதியாண்டில் 5.44 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

 

இந்த மூன்று ஆண்டு காலத்தில் வரி செலுத்துவோரில் தங்கள் வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த 2014-15 நிதியாண்டில் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் எனக் காட்டினர். தற்போது 2017-18 நிதியாண்டில் 1,40,139 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் என தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% ஆக அதிகரித்துள்ளது.

 

நிறுவன வரி செலுத்துவோரின் சராசரி கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.32.28 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.49.95 ஆகா 55% அதிகரித்துள்ளது. தனிநபர் வரி செலுத்துவோர் சராசரி வருமானம் 2014-15 நிதியாண்டில் ரூ.46,377 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.5,8,576 ஆகா அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News