திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

சட்டசபை தேர்தல்கள் 2023: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2023, 04:41 PM IST
  • திரிபுராவில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே நான்கு முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
  • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் இந்த ஆண்டின் முதல் தேர்தல்களாக இருக்கும்.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! title=

சட்டசபை தேர்தல்கள் 2023: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிப்புடன், மூன்று மாநிலங்களிலும் மாதிரி நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. நாகாலாந்து சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முறையே மார்ச் 15 மற்றும் 22ஆம் தேதியும் முடிவடைகிறது. மூன்று மாநிலங்களின் சட்டசபைகளிலும் 60-60 இடங்கள் உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் இந்த ஆண்டின் முதல் தேர்தல்களாக இருக்கும். திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆட்சியில் உள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (NPP) ஆட்சி நடைபெற்று வருகிறது. வடகிழக்கில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே கட்சி NPP மட்டுமே.

மேலும் படிக்க | பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலம் 2024 வரை நீட்டிப்பு!

திரிபுராவில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே நான்கு முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. மேகாலயாவில், 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பாஜக, தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது.

நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (NDPP)- BJP கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில்,  நாகாலாந்து பழங்குடியின குழுக்களின் தனி மாநிலமான 'எல்லை நாகாலாந்து' கோரிக்கையை மையப் பிரச்சினையாகக் காண வாய்ப்புள்ளது. 2018 தேர்தலில், NPF தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் NDPP-BJP கூட்டணி மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க | பெண் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 60 நாள் சிறப்பு விடுப்பு அறிவித்த மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News