'பொருளாதார சீரழிவு': இலவச அரசியலை கட்டுப்படுத்த விரும்பும் உச்ச நீதிமன்றம்

இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பது குறித்த அறிக்கையை, ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம்  கேட்டுக் கொண்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 06:35 PM IST
  • அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
  • இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு.
  • இலவச திட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாத காரணத்தினால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது.
'பொருளாதார சீரழிவு': இலவச அரசியலை கட்டுப்படுத்த விரும்பும் உச்ச நீதிமன்றம் title=

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் இலவச திட்டங்கள் பல்வற்றை நடைமுறைப் படுத்துவதாக கூறி வாக்குறுதிகள் அறிவிப்பது  மிகவும் வழக்கமான ஒன்றாகி விட்டது. அவற்றில் சில நடைமுறையில் சாத்தியம் இல்லாத வகையிலும், அரசின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. எனவே, மக்கள் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளின் இலவசங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க நிதி ஆயோக், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி (RBI) என அனைவரையும் உள்ளடக்கிய உச்ச அமைப்பு தேவை என்று கூறியது.

இலவசங்களை விரும்பும் மற்றும் அதை எதிர்க்கும் அனைத்து பிரிவினரும், RBI, NITI ஆயோக், எதிர்க்கட்சிகள் உட்பட இணைந்து சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் இந்த செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் என்று பெஞ்ச் கூறியது. இலவசத் திட்ட அறிவிப்பு விவகாரத்தை தேர்தல் ஆணையமும், மத்திய நிதி ஆணையமும் விவாதித்து அறிக்கை அளிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. 

மேலும் படிக்க | பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்

இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பது குறித்த அறிக்கையை, மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் மற்றும் மனுதாரர்கள், ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம்  கேட்டுக் கொண்டது. இலவச திட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாத காரணத்தினால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான மனுவை ஆதரித்து, இதனால் நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார். மக்களை கவரும் நோக்கில் மட்டுமே வழங்கப்படும் இந்த வாக்குறுதிகள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான் நாம் பொருளாதார பேரழிவுகளை நோக்கி செல்கிறோம் என்று மேத்தா கூறினார்.

தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என கூறியுள்ளார்.  தேர்தல் சமயத்தில் இலவசங்களை தருவதாக அரசியல் கட்சிகள் கூறுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News