ஆடை வடிவமைப்பாளரும் அவரின் உதவியாளரும் கொலை: 3 பேர் கைது

டெல்லியில் ஆடை வடிவமைப்பாளரும் அவரின் உதவியாளரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 11:56 AM IST
ஆடை வடிவமைப்பாளரும் அவரின் உதவியாளரும் கொலை: 3 பேர் கைது title=

டெல்லியில் ஆடை வடிவமைப்பாளரும் அவரின் உதவியாளரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் வசந்த் கஞ்சில் ஒரு வீட்டில் ஆடை வடிவமைப்பாளரான மாலா லக்கானி என்கிற பெண்ணும் அவருடைய உதவியாளரும் மர்மமுரையில் கொல்லப்பட்டுச் சடலமாகக் கிடந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றிக் உடற்க்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் மாலா லக்கானியின் தையற்கடையில் பணிபுரிந்த ராகுல் அன்வர், அவர் உறவினர் இருவர் என 3 பேரைக் கைது செய்துள்ளனர். மாலா லக்கானியின் வீட்டில் கொள்ளையடிக்க வந்தபோது இருவரையும் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

Trending News