ஜனவரி 15 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்"

"2020ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்" நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 28, 2019, 09:21 AM IST
ஜனவரி 15 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்"  title=

"2020ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்" நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதில் தொடர்ந்து முயற்சி வந்தது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் கார்டு மூலம் வாங்கி கொள்ளும் முறையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். அதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் (Electronic Point of Sale) அல்லது ஆதார் அடையாளம் (Aadhaar Authentication) அட்டை மூலம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

இந்த முறை பெரும்பாலும் புலம்பெயர்ந்த பயனாளிகளான தொழிலாளர்கள், தினசரி கூலிகள், வேலை தேடி வேறு இடத்திற்கு செல்லுவோர்க்ளுக்கு பயனளிக்கும். அவர்கள் நாடு முழுவதும் உள்ள பிற காரணங்களுக்காகவோ தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. 

Trending News