கற்பழித்த கும்பலிடம் இருந்து தப்ப சாலையில் நிர்வாணமாக ஓடிய பெண்!

தன்னை கற்பழிக்க வந்த காமுகர்களிடம் இருந்து தப்பிக்க சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நிர்வாணமாக ஓடிய பெண்!

Last Updated : Sep 14, 2019, 05:05 PM IST
கற்பழித்த கும்பலிடம் இருந்து தப்ப சாலையில் நிர்வாணமாக ஓடிய பெண்! title=

தன்னை கற்பழிக்க வந்த காமுகர்களிடம் இருந்து தப்பிக்க சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நிர்வாணமாக ஓடிய பெண்!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு கற்பழிக்க முயன்ற போது அவர்களிடம் இருந்து தப்ப நிர்வாணமாக அந்த சிறுமி கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் ஓடினார். இவரை சில வழிப்போக்கர்கள் மீட்டுள்ளனர், அவளும் தன்னை மறைப்பதற்கு ஆடைகளை கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாராயண் குர்ஜார், கைலாஷ் கஹார் மற்றும் ராஜு கஹார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியும் அவரது நண்பர்களும் ஒரு கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது மது அருந்திய மூன்று பேரும் தங்கள் வழியைத் தடுத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் நண்பர்கள் தப்பிக்க சென்றுள்ளனர், ஆண்கள் சிறுமியைக் கடத்தி, அருகிலுள்ள வயலில் ஒரு ஒதுங்கிய பகுதிக்கு இழுத்துச் சென்று, அவரைக் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்கள் அவளுடைய ஆடைகளைக் கிழித்து தாக்கியுள்ளனர். 

இதையடுத்து, சிறுமி எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் துணி இல்லாமல் சாலையில் ஓடினாள். பயந்துபோன சிறுமி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடினாள். இதையடுத்து, வழியில் சென்ற சிலர் அவரை பத்திரமாக மீட்டு வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.   

 

Trending News