சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும்: DGCA

தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில், பயணிகளின் விவரங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 04:41 PM IST
சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும்: DGCA title=

வெளிநாட்டு பயணிகளுக்கு நல்ல செய்தி!! சர்வதேச விமான போக்குவரத்து மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளது.

ஜீ பிசினஸிடம் பிரத்தியேகமாகப் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சல், சர்வதேச விமானச் செயல்பாடுகள் (International Travel)விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கோவிட் -19 (COVID-19) பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சர்வதேச விமானங்களின் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், சில நாடுகளுடன் காற்று குமிழி ஏற்பாட்டின் கீழ் விமானக் கட்டுப்பாடுகள் பின்னர் தளர்த்தப்பட்டன. தற்போது, ​​இந்தியா சுமார் 28 நாடுகளுடன் காற்று குமிழி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர் திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்தது. இருப்பினும், மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), “இந்த கட்டுப்பாடு சர்வதேச அனைத்து சரக்கு நடவடிக்கைகளுக்கும் DGCA ஆல் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது." என்று கூறினார்.

ALSO READ: இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு? 

தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில், பயணிகளின் விவரங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இந்தியா கடந்த ஒரு வருடமாக பல நாடுகளுக்கு வந்தே பாரத் விமானங்களை இயக்கி வருகிறது.

காற்று குமிழி ஒப்பந்தம் என்பது பயணத்தை எளிதாக்குவதற்கும், தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயணிகளின் பயணத்தை இலகுவாக்குவதற்கும் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒரு பாலமாகும்.

தற்போது, ​​இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பொருந்தும். இப்போது மற்ற நாட்டிற்குள் நுழைய RT-PCR சோதனை மட்டுமே தேவை. மறுபுறம், உள்நாட்டு விமானப் பயணங்கள் (Domestic Travel) கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் உள்ளன. முழு திறனில் விமானங்களை இயக்க அரசு அளித்த அனுமதியை அடுத்து, உள் நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News