இதயத்தை உலுக்கும் தக்காளி விலை... 162 ரூபாய் வரை விற்பனை - புதிய உச்சம்!

Tomato Price Hike: நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், நேற்று உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் அதிகபட்சமாக கிலோ 162 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 07:43 AM IST
  • சென்னையில் நேற்று தக்காளி 117 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்.
  • வழக்கமாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி விலை அதிகரிக்கும்.
  • ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.31 ஆக விற்கப்பட்டுள்ளது.
இதயத்தை உலுக்கும் தக்காளி விலை... 162 ரூபாய் வரை விற்பனை - புதிய உச்சம்! title=

Tomato Price Hike: தக்காளி விலையில் இருந்து சாமானியர்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். 

நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழை காரணமாக வரத்து தடைபட்டதால் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.162 ஆக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை முன்னதாக கொல்கத்தாவில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.152 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தற்போது தக்காளியின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது எனலாம். 

இதைத் தொடர்ந்து டெல்லியில் கிலோ 120 ரூபாய்க்கும், சென்னையில் கிலோ 117 ரூபாய்க்கும், மும்பையில் 108 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, அகில இந்திய அளவில் சில்லறை தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு 95.58 ரூபாயாக இருந்தது. அதிகபட்ச விலை உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் கிலோ ஒன்றுக்கு ரூ.162 ஆக இருந்தது. இதன் நாட்டிலேயே அதிகபட்ச விலையாகும். அதேபோல், ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.31 ஆகவும் இருந்ததாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுதான் நாட்டின் குறைந்த விலையாகும்.

மேலும் படிக்க | 60 மூட்டை தக்காளி திருட்டு... இன்றைய விலையில் அது எத்தனை லட்சம் தெரியுமா?

வரலாறு காணாத அளவில் தக்காளி விலை

நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு முன்பு, தக்காளியின் சில்லறை விலை குருகிராமில் கிலோ 140 ரூபாயாகவும், பெங்களூரில் 110 ரூபாயாகவும், வாரணாசியில் 107 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் கிலோ 98 ரூபாயாகவும், போபாலில் கிலோ 90 ரூபாயாகவும் இருந்தது. வழக்கமாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி விலை அதிகரிக்கும். பருவமழை வரி விதிப்பால், அழுகும் பொருட்களின் அறுவடை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த கோடை காலத்தில் திடீரென ஏற்பட்ட அதிக வெப்பத்தால், பூச்சி தாக்குதலும் வரத்து குறைவுக்கு காரணம் என ஒருபுறம் கூறப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் புதிய முன்னெடுப்பு

முன்னதாக, தக்காளி விலை உயர்வில் இருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. நியாய விலைக்கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு சென்னை, கோவை, சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது என்று அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி சப்ளை செய்யப்படுகிறது என்றும் தற்போது தக்காளி விலை குறைந்திருக்கிறது என்றும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். மேலும், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வரும் நாள்களில் விரிவுப்படுத்தப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பொது சிவில் சட்ட விவகாரம்... முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News